கெமிஸ்ட்ரி! எங்களை ஏன் தப்பா பேசுறீங்க? பொங்கி எழுந்த லலித் மோடி.. சுஷ்மிதா சென் பற்றி பேச்சு
டெல்லி: ஐபிஎல் போட்டியை அறிமுகம் செய்தவரும் அதன் முன்னாள் தலைவருமான லலித் மோடிக்கும் முன்னாள் உலக அழகியான சுஷ்மிதா சென்னுக்கும் இடையேயான நட்பு குறித்த சர்ச்சைகள் மேலெழுந்துள்ள நிலையில் இது குறித்த விமர்சிப்பவர்களுக்கு நடிகர் அஜித் பாணியில் சமூக வலைத்தளங்களில் லலித் மோடி பதிலளித்துள்ளார்.
இது தொடர்பாக ஒரு நீண்ட குறிப்பையும் அவர் எழுதி வெளியிட்டுள்ளார்.
தனது முன்னாள் மனைவி மற்றும் குழந்தைகள் அடங்கிய புகைப்படத் தொகுப்பை வெளியிட்ட லலித் மோடி கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.

என்ன சொன்னார்?
"சமூக வலைத்தளங்களில் ஏன் என்னை பற்றி தவறாக சித்தரிக்கப்படுகிறது என தெரியவில்லை. தெரிந்தால் யாராவது விளக்குங்கள். நான் இன்ஸ்டாவில் சில படங்களை மட்டுமே பதிவிட்டேன். இதற்காக நான் ஏன் விமர்சிக்கப்படுகிறேன்? இப்போது நாங்கள் (சுஷ்மிதா சென்) இருவரும் நண்பர்களாக இருக்கிறோம். ஒருவேளை இருவருக்குமிடையேயான புரிதல் நேர்மறையானதாக இருப்பின் எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட் ஆனால் அதிசயம் நிகழலாம்.

சுஷ்மிதா சென்
இதற்கிடையில் இவ்வாறான விமர்சனங்கள் தேவையற்றது. நீங்கள் 'வாழுங்கள் மற்றும் மற்றவரை வாழவிடுங்கள்' இதுதான் என்னை விமர்சிப்பவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை. சமூக வலைத்தளத்தில் எழுதும் நீங்கள், டொனால்ட் டிரம்ப் போல தவறான செய்தியை எழுதாதீர்கள். சிலர் என் தோழியை என் அம்மாவின் தோழி என்று குறிப்பிட்டுள்ளீர்கள். இது தவறான தகவல். இது ஒரு வதந்தி. அதேபோல என்னை நீங்கள் நாட்டைவிட்டு தப்பியோடியவன் என்று குறிப்பிடுகிறீர்கள்.

கெமிஸ்ட்ரி
நீதிமன்றம் எப்போது என்னை குற்றவாளி என்று அடையாளப்படுத்தியது என்பதையும் நீங்கள் விளக்க வேண்டும். இந்தியாவில் தொழில் செய்வது ஒன்றும் அவ்வளவு எளிதானதல்ல" என்றும் லலித் மோடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியுள்ளார். மேலும் ஐபிஎல் போட்டிகள் குறித்தும் சில வரிகளை அவர் எழுதியுள்ளார். முன்னதாக லலித் மோடி இன்ஸ்டாவில், சுஷ்மிதா சென் தன்னுள் பாதி என்றும், தான் இன்னும் அவரை திருமணம் செய்துகொள்ளவில்லை எனவும் விரைவில் திருமணம் நடக்கும் என்றும் அவர் பதிவிட்டிருந்தார்.

வீடியோ
இதனைத் தொடர்ந்து சுஷ்மிதா சென்னும் தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது இரு குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை, மோதிரம் மாற்றிக்கொள்ளவில்லை ஆனால் நிபந்தனையற்ற அன்பால் சூழப்பட்டுள்ளேன் என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications