Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி.. டெல்லியில் பிரதமர் மோடியை முறைப்படி அழைத்த தமிழக அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் ஜூலை 28 ல் துவங்கி நடைபெற உள்ளது. இதன் துவக்க விழாவில் பங்கேற்க வரும்படி தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் அழைப்பு விடுத்தனர்.

சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இதுவரை 43 முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்திருந்தாலும் கூட அதில் ஒன்று கூட இந்தியாவில் நடைபெறவில்லை.

இந்தியாவில் முதல் முறையாக இந்த ஆண்டுதான் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடக்கிறது.

ஜூலை 28 முதல் துவக்கம்

ஜூலை 28 முதல் துவக்கம்

மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்கின்றன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் அனைவரின் பார்வையும் தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. இதற்கிடையே தான் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்பாடுகள் தீவிரம்

இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதால் அதனை சிறப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை மனதில் கொண்டு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அரங்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் நேப்பியர் பாலமும் செஸ் விளையாட்டு கட்டங்கள் போன்று கருப்பு, வெள்ளை நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேரு அரங்கில் துவக்க விழா

நேரு அரங்கில் துவக்க விழா

இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28 ல் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதாக இருந்தது. ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளதால் தமிழக அரசு சார்பிலான குழு ஒன்று பிரதமர் மோடியை சந்தித்து நேரில் அழைப்பு விடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தன்னிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

 பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு

பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு

அதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவுக்கு பிரதமர் மோடியை தமிழ்நாடு குழு ஒன்று இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+