மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டி.. டெல்லியில் பிரதமர் மோடியை முறைப்படி அழைத்த தமிழக அரசு
டெல்லி: சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழகத்தில் மாமல்லபுரத்தில் ஜூலை 28 ல் துவங்கி நடைபெற உள்ளது. இதன் துவக்க விழாவில் பங்கேற்க வரும்படி தமிழக அரசு சார்பில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்டவர்கள் அழைப்பு விடுத்தனர்.
சர்வதேச அளவிலான 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் தமிழகத்தின் மாமல்லபுரத்தில் நடக்க உள்ளது. இதுவரை 43 முறை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடந்திருந்தாலும் கூட அதில் ஒன்று கூட இந்தியாவில் நடைபெறவில்லை.
இந்தியாவில் முதல் முறையாக இந்த ஆண்டுதான் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடக்கின்றன. அதுவும் தமிழ்நாட்டில் மாமல்லபுரத்தில் நடக்கிறது.

ஜூலை 28 முதல் துவக்கம்
மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் ஜூலை 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10 வரை நடக்கின்றன. இதில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் அதிகமான சர்வதேச செஸ் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்துகொள்ள உள்ளனர். இதனால் அனைவரின் பார்வையும் தமிழகத்தை நோக்கி திரும்பியுள்ளது. இதற்கிடையே தான் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.

ஏற்பாடுகள் தீவிரம்
இந்தியாவில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடைபெற உள்ளதால் அதனை சிறப்பாக நடத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தீவிரமாக தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு மிகச்சிறப்பாக நடத்த வேண்டும் என்பதை மனதில் கொண்டு தீவிர ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான அரங்குகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. தற்போது 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மேலும் நேப்பியர் பாலமும் செஸ் விளையாட்டு கட்டங்கள் போன்று கருப்பு, வெள்ளை நிறமாக மாற்றப்பட்டுள்ளது. இது பார்வையாளர்களை கவரும் வண்ணம் உள்ளது. மேலும் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் "நம்ம செஸ் நம்ம பெருமை" என்ற பெயரில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நேரு அரங்கில் துவக்க விழா
இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா ஜூலை 28 ல் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடியை பங்கேற்க செய்ய தமிழக அரசு முடிவு செய்தது. முதல்வர் முக ஸ்டாலின் நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடியை அழைப்பதாக இருந்தது. ஆனால் அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டுள்ளதால் தமிழக அரசு சார்பிலான குழு ஒன்று பிரதமர் மோடியை சந்தித்து நேரில் அழைப்பு விடுக்கும் என அறிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக தன்னிடம் நலம் விசாரித்த பிரதமர் நரேந்திர மோடியிடம், முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருந்தார்.

பிரதமர் மோடிக்கு நேரில் அழைப்பு
அதன்படி செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழாவுக்கு பிரதமர் மோடியை தமிழ்நாடு குழு ஒன்று இன்று நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தது. திமுக எம்பிக்கள் டிஆர் பாலு, கனிமொழி, அமைச்சர் மெய்யநாதன், தமிழக தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டியின் அழைப்பிதழ் வழங்கி அழைப்பு விடுத்தனர்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை!












Click it and Unblock the Notifications