இவ்வளவு மோசமான பிரதமரை பார்த்ததே இல்லை.. பிரதமருக்கான கடமை என்னவென்றே தெரியவில்லை.. ராகுல் காந்தி
டெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார். இந்த நிலையில், பிரதமருக்கான கடமை என்ன என்பதே மோடிக்கு தெரியவில்லை என்றும், ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்ததே இல்லை என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நேற்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு பதிலளித்து பேசினார். அப்போது 2 மணி நேரத்திற்கும் மேலாக மோடி பேசினார். தனது பதிலுரையில் கடைசியில் தான் மணிப்பூர் குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். இந்த நிலையில், பிரதமர் மோடியின் பதிலுரை குறித்து ராகுல் காந்தி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது ராகுல் காந்தி கூறியதாவது:-

நாடாளுமன்றத்தில் 2 மணி நேரம் 13 நிமிடங்கள் பேசிய பிரதமர் மோடி வெறும் 2 நிமிடங்கள்தான் மணிப்பூர் குறித்து பேசினார். மணிப்பூர் விவகாரத்தை பிரதமர் மோடி நகைப்புக்குரியதாக கருதக்கூடாது. மணிப்பூரில் பல மாதங்களாக பற்றி எரிகிறது. மக்கள் கொல்லப்படும் போது நாடாளுமன்றத்தில் பிரதமர் சிரிப்பது வெட்ககேடானது. பிரதமர் மோடி கட்டாயம் மணிப்பூர் செல்ல வேண்டும்.
மணிப்பூர் தொடர்பான எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். இந்திய ராணுவம் 2 நாட்களில் மணிப்பூர் கலவரத்தை தடுத்து இருக்கும். ஆனால், கலவரத்தை தடுக்க பிரதமர் விரும்பவில்லை. பிரதமர் மோடி மணிப்பூர் செல்வதற்கான அறிகுறி கூட தெரியவில்லை. தீவிரமான ஒரு விஷயத்தை எந்த ஒரு பிரதமரும் இப்படி கையாண்டுள்ளாரா? என்பது தெரியவில்லை.
மணிப்பூரில் பாரதமாதா கொலை செய்யப்பட்டதாக நான் கூறியதை திரித்து கூறுகிறார். நான் மீண்டும் சொல்கிறேன். இந்தியா என்ற கருத்தியலை பாஜக கொலை செய்து விட்டது. பிரதமருக்கான கடமை என்ன என்பதே மோடிக்கு தெரியவில்லை. ஒரு பிரதமர் இவ்வளவு மோசமாக நாடாளுமன்றத்தில் நடந்து கொண்டதை பார்ததே இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
மேலும் ராகுல் காந்தி கூறுகையில், " பிரதமர் மோடி மணிப்பூருக்கு ஏன் செல்லவில்லை என எனக்கு தெரியும். ஆனால் அதை வெளிப்படையாக சொல்ல மாட்டேன். ஊடகங்கள் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. ராஜ்யசபா, லோக்சபா டிவிக்கள் அவர்களின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. நான் எனது பணியை செய்து கொண்டே இருப்பேன். பாரதமாத எங்கெல்லாம் தாக்கப்படுகிறாரோ.. அங்கெல்லாம் நான் பாதுகாக்க வருவேன்.
மணிப்பூர் பற்றி எரிய வேண்டும் என்றுதான் பிரதமர் மோடி நினைக்கிறார். அதை சரி செய்ய வேண்டும் என்று அவர் நினைக்கவில்லை. நான் பேசிய பாரத மாதா என்ற வார்த்தைகள் நடாளுமன்ற அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அரசியலில் 19 ஆண்டு காலமாக இருக்கிறேன். பல மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். ஆனால் மணிப்பூர் மாநிலத்தில் நான் கேட்டது பார்த்தது எல்லாம் அசாதாரணமானதுதான்" என்றார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications