மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது - ராகுல்காந்தி
மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
டெல்லி: வெளிநாடுகளில் இருந்து மத்திய அரசு உதவி பெருவது வேதனையளிப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. தினசரியும் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தினசரியும் 4ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர்.

இந்தியாவிற்கு அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், அயர்லாந்து, பெல்ஜியம், ரோமானியா, சிங்கப்பூர், ஸ்வீடன், குவைத் ஆகிய நாடுகள் மருத்துவ உதவி செய்து வருகின்றன. மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் போன்றவை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு விமானம் மூலம் வருகின்றன.
இந்த நிலையில் வெளிநாட்டு உதவிகள் குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மத்திய அரசுக்கு ட்விட்டரில் கடந்த சில நாட்களுக்கு முன் கேள்விகளை எழுப்பி இருந்தார். அதில், இந்தியாவுக்கு வெளிநாடுகள் அளிக்கும் உதவிகள் குறித்து சில கேள்விகளைக் கேட்கிறேன்.

என்ன மாதிரியான மருத்துவ உபகரணங்களை இந்தியா வெளிநாடுகளில் இருந்து பெற்றது?, இந்த மருத்துவ உபகரணங்கள், நிதியுதவியால் யார், எந்த மாநிலம் பயன்பெற்றது? எவ்வாறு, எந்த அடிப்படையில் மாநிலங்களுக்கு உதவிகள் ஒதுக்கப்பட்டன? என்று கேள்வி எழுப்பினார். வெளிநாட்டு உதவிகள் பற்றி ஏன் வெளிப்படைத் தன்மை இல்லை?, மத்திய அரசிடம் இருந்து ஏதாவது பதில் இருக்கிறதா என்று பதிவிட்டிருந்தார்.
இந்த நிலையில் இன்று மீண்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல்காந்தி, வெளிநாட்டு உதவிகளைப் பெறும் மத்திய அரசுக்கு மீண்டும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், கொரோனா நோயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளில் இருந்து உதவிகளைப் பெற்றுள்ளது மத்திய அரசு. வெளிநாடுகளில் இருந்து உதவியைப் பெற்றுக் கொண்டு மத்திய அரசு மார்தட்டி பெருமை கொள்வது வேதனை அளிக்கிறது என்று கூறியுள்ளார். மத்திய அரசு தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்குமா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்?












Click it and Unblock the Notifications