கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. வீட்டிலேயே இருங்க.. வெளியே போனால் கொரோனா உள்ளே வரும்- மோடி
டெல்லி: கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்த 21 நாட்கள், அதாவது 3 வார ஊரடங்கின் போது அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும்.
21 நாட்கள் லாக் டவுன் என்பது அதிக காலம்தான். ஆனால் அது உங்கள் மற்றும் உங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு இந்தியரும் இந்த கொரோனா சவாலை வெற்றிகரமாக சமாளிப்பது மட்டுமல்லாமல் நெருக்கடியான இந்த நேரத்தில் வெற்றியும் பெற வேண்டும்.

காவல் துறையினர்
உங்களுக்காக பணியில் இருக்கும் காவல்துறையினரை நினைத்து பாருங்கள். இரவு பகல் பாராமல் அவர்களது குடும்பத்தினரை பற்றி நினைக்காமல் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பணியை செய்து வருகிறார்கள். சில நேரங்களில் மக்களின் கோபதாபத்தையும் அவர்கள் சந்திக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

உயிர்களை காக்க
நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனா உள்ளே வந்துவிடும். எனவே உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். வீட்டுக்குள் இருக்கும் போது உங்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றுவோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், நோயியல் நிபுணர்கள் என உயிர்களை காக்க இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

பிரார்த்தனை
இந்த கடினமான காலங்களில் மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வார்டு பாய்கள், சேவையாற்றும் மற்றவர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். நம் சமூகத்தையும் அக்கம்பக்கத்தினரையும் சாலைகளையும் பொது இடங்களிலும் சுகாதாரமாக வைத்திருக்கவும் நோயை ஒழிக்கவும் பணியாற்றுவோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

மருத்துவமனைகள்
சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் இவர்கள் தங்கி 24 மணி நேரமும் சேவையாற்றி வருகிறார்கள். பெரியவர்ள், வியாபாரிகள், குழந்தைகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது. இதை தடுக்க ஒரே வழி சமூக விலகல்தான்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications