கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன்.. வீட்டிலேயே இருங்க.. வெளியே போனால் கொரோனா உள்ளே வரும்- மோடி
டெல்லி: கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
Recommended Video
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் இந்த 21 நாட்கள், அதாவது 3 வார ஊரடங்கின் போது அனைத்து அத்தியாவசிய பொருட்களும் கிடைக்கும்.
21 நாட்கள் லாக் டவுன் என்பது அதிக காலம்தான். ஆனால் அது உங்கள் மற்றும் உங்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது. ஒவ்வொரு இந்தியரும் இந்த கொரோனா சவாலை வெற்றிகரமாக சமாளிப்பது மட்டுமல்லாமல் நெருக்கடியான இந்த நேரத்தில் வெற்றியும் பெற வேண்டும்.

காவல் துறையினர்
உங்களுக்காக பணியில் இருக்கும் காவல்துறையினரை நினைத்து பாருங்கள். இரவு பகல் பாராமல் அவர்களது குடும்பத்தினரை பற்றி நினைக்காமல் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் பாதுகாக்கும் பணியை செய்து வருகிறார்கள். சில நேரங்களில் மக்களின் கோபதாபத்தையும் அவர்கள் சந்திக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளது.

உயிர்களை காக்க
நீங்கள் வீட்டை விட்டு வெளியே சென்றால் கொரோனா உள்ளே வந்துவிடும். எனவே உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள். வீட்டுக்குள் இருக்கும் போது உங்கள் தங்கள் வாழ்க்கையை பணயம் வைத்து பணியாற்றுவோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள். மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், நோயியல் நிபுணர்கள் என உயிர்களை காக்க இரவு பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

பிரார்த்தனை
இந்த கடினமான காலங்களில் மருத்துவமனை நிர்வாகம், ஆம்புலன்ஸ் டிரைவர்கள், வார்டு பாய்கள், சேவையாற்றும் மற்றவர்கள் மக்களுக்காக பணியாற்றி வருகிறார்கள். நம் சமூகத்தையும் அக்கம்பக்கத்தினரையும் சாலைகளையும் பொது இடங்களிலும் சுகாதாரமாக வைத்திருக்கவும் நோயை ஒழிக்கவும் பணியாற்றுவோருக்காக பிரார்த்தனை செய்யுங்கள்.

மருத்துவமனைகள்
சாலைகளிலும், மருத்துவமனைகளிலும் இவர்கள் தங்கி 24 மணி நேரமும் சேவையாற்றி வருகிறார்கள். பெரியவர்ள், வியாபாரிகள், குழந்தைகள் என எல்லோரும் இணைந்து கொரோனாவை எதிர்கொள்ள வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரிக்கிறது. இதை தடுக்க ஒரே வழி சமூக விலகல்தான்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications