இது சட்ட விரோதம்.. ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் உமர் அப்துல்லா கட்சி உச்சநீதிமன்றத்தில் வழக்கு
டெல்லி: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கும், மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிப்பதற்கும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக தேசிய மாநாடு கட்சி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அக் கட்சி எம்.பி.க்கள் அக்பர் லோன் மற்றும் ஹஸ்னைன் மசூதி ஆகியோர் தாக்கல் செய்துள்ள தனது மனுவில், மத்திய அரசின் நடவடிக்கை சட்டவிரோதமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீருக்கு அரசியலமைப்பின் கீழ் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாகவும், ஜம்மு-காஷ்மீர் சட்டசபையின் ஒப்புதல் பெறாமல், சிறப்பு அந்தஸ்தை நீக்குவதற்கான ஜனாதிபதி உத்தரவு அரசியலமைப்பு ரீதியாக செல்லாது என்றும், தேசிய மாநாடு கட்சியின் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்லது.

அமைச்சரவை ஆலோசனையின்பேரில் குடியரசு தலைவர் இப்படி ஒரு முடிவை எடுக்க முடியாது. இது, தன்னிச்சையானது மற்றும் சட்ட விதிக்கு முரணானது.
ஜம்மு-காஷ்மீர் (மறுசீரமைப்பு) சட்டம், 2019 - இதன் கீழ் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டிருப்பது அரசியலமைப்பு ரீதியாக செல்லாது. அரசியலமைப்பு சட்டம், ஒரு மாநிலத்தை, யூனியன் பிரதேசம் போன்ற குறைந்த பிரதிநிதித்துவ வடிவத்திற்கு பின்னோக்கி தரமிறக்க நாடாளுமன்றத்திற்கு அனுமதிதரவில்லை, என்று அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உமர் அப்துல்லா மற்றும் மற்றொரு முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி மற்றும் நூற்றுக்கணக்கான அரசியல் தலைவர்கள் காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கை பராமரிக்க வழக்கமான படை வீரர்களைவிட கூடுதலாக 50,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரர்கள் மாநிலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications