குடியரசு தலைவர் தேர்தல்.. திரெளபதி முர்முவின் வெற்றிக்காக பிரார்த்தனை செய்த பூர்வீக கிராம மக்கள்
புதுடெல்லி: ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், பா.ஜனதா வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற வேண்டி அவரது சொந்த மாநிலமான ஒடிசாவில் பொதுமக்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வருகிற 24-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அடுத்த ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு குடியரசு தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த் சின்கா அறிவிக்கப்பட்டுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை வருகிற 21-ந் தேதி (வியாழன்) காலை டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது வெற்றி பெற்றவர் யார் என்று அறிவிக்கப்படுவார்.

வெற்றி வாய்ப்பு யாருக்கு
ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் வெற்றி பெறும் புதிய ஜனாதிபதி வருகிற 25-ந்தேதி பதவி ஏற்பார். தற்போதைய சூழ்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கே குடியரசுத்தலைவர் ஆவதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இறைவழிபாட்டில் கிராமத்தினர்
இதனிடையே, திரெளபதி முர்மு வெற்றி பெற வேண்டி அவரது சொந்த கிராமத்து பழங்குடியின மக்கள் இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர். பாரம்பரிய முறைப்படி தங்களது இஷ்ட தெய்வத்தை சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கி வருகின்றனர். திரெளபதி முர்முவின் கிராமத்தினர் இறைவழிபாட்டில் ஈடுபட்டுள்ள புகைப்படங்கள் டுவிட்டரில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

அரசியல் ஆர்வம்
ஒடிசா மாநிலம், மயூர்பஞ்ச் மாவட்டத்தில் உள்ள பாய்டாபோசி என்ற கிராமத்தில் கடந்த 1958-ம் ஆண்டு ஜூன் 20-ந் தேதி பிறந்த திரௌபதி முர்மு சந்தால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஜார்கண்டில் அதிக அளவில் இந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர். அரசியல் ஆர்வத்தினால் பா.ஜ.க.வில் சேர்ந்த திரௌபதி முர்மு ராய்ரங்பூர் சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ. ஆனார்.

முதல் பழங்குடியின குடியரசுத்தலைவர்
ஒடிசாவில் பா.ஜ.க., பிஜு. ஜனதா தளம் கூட்டணி ஆட்சியில் வர்த்தகம் மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகவும் ,கால்நடை வளர்ச்சித் துறை அமைச்சராகவும் பதவி வகித்து இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மே 18-ந் தேதி முதல் 2021-ம் ஆண்டு ஜூலை 12-ந் தேதி வரை ஜார்க்கண்ட் ஆளுநராக பதவி வகித்தார். இதனால் ஜார்கண்டின் முதல் பெண் ஆளுநர் என்ற பெருமையும் திரௌபதி முர்மு பெற்றார். குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றி பெறும் பட்சத்தில், பழங்குடியினத்தை சேர்ந்த முதல் குடியரசு தலைவர் என்ற பெருமையும் அவருக்கு கிடைக்கும்.
-
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் இவை தானா? கொங்கு & தென் மண்டலம் டார்கெட்! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் தாமரையின் அசத்தல்! முழு அதிரடி பலன்கள் இதோ -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
2021 vs 2026.. அதிமுக கூட்டணியில் யாருக்கு லாபம்.. பாஜக, பாமக அமமுக வாக்கு சதவீதம் என்ன?












Click it and Unblock the Notifications