1980களில் மோடி இ- மெயில் அனுப்பினார்? டிஜிட்டல் கேமரா வெச்சிருந்தார்?.. ட்விட்டரில் ‘தெறி’சர்ச்சை
Recommended Video
டெல்லி: 1980களில் தாம் டிஜிட்டல் கேமரா மற்றும் டிஜிட்டல் பேட் வைத்திருந்ததாக பிரதமர் மோடி அளித்த பேட்டி ட்விட்டரில் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.
மேகங்களுக்கு இடையே விமானங்கள் சென்றால் ரேடாரில் அது தெரியாது என பிரதமர் மோடி பகிரங்கமாக அளித்த பேட்டி பெரும் கேலிக்குரியதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடி கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.
தற்போது நியூஸ் நேஷன் டிவிக்கு மோடி அளித்த பேட்டி மற்றொரு சர்ச்சையை கிளப்பியுள்ளது. நியூஸ் நேஷனுக்கு அளித்த பேட்டியில், 1990களின் தொடக்கத்திலேயே டிஜிட்டல் பேட் வைத்திருந்தேன். இப்போது அனைவரும் அதனை பயன்படுத்துகிறார்கள். அதேபோல் 80களிலேயே நான் டிஜிட்டல் கேமரா வைத்திருந்தேன். 1987 அல்லது 88-ல் அத்வானியை டிஜிட்டல் கேமராவில் படம் பிடித்து டெல்லிக்கு அந்த போட்டோவை அனுப்பினேன். அத்வானி தமது கலர் போட்டோவை பார்த்து ஆச்சரியப்பட்டார் என கூறியிருந்தார்.

விமர்சிக்கப்படும் மோடி
இந்தியாவில் டிஜிட்டல் கேமரா, டிஜிட்டல் பேட் என்பவை 1990களுக்குப் பின்னர்தான் அறிமுகமாகி 2000-ம் ஆண்டுகளில் அன்றாடப் பயன்பாட்டு பொருட்களில் ஒன்றானது. ஆனால் பிரதமர் மோடி 1980களிலேயே இவற்றை தாம் வைத்திருந்ததாக கூறியிருப்பது கடும் விமர்சனத்துக்குள்ளாக்கியுள்ளது.

ஏழை தாயின் மகனிடம் டிஜிட்டல் கேமரா?
மேலும் அதே போட்டியில் தாம் எம்.எல்.ஏ.வாகும் வரை தமக்கு வங்கிக் கணக்கே இல்லை.. எம்.எல்.ஏ. ஆனபோதுதான் கொஞ்சம் பணம் கிடைத்தது எனவும் மோடி கூறியுள்ளார். இதையும் சுட்டிக்காட்டி 1980களில் ஒரு சிலரிடமே இருந்த விலை உயர்ந்த டிஜிட்டல் கேமராவை கையில் பணமே இல்லாத மோடி எப்படி வைத்திருந்தார்? என கேள்வி எழுப்புகின்றனர்.

இ மெயில் ஐடி என்ன?
இந்தியாவில் இ மெயில் அறிமுகம் செய்யப்பட்டதே 1995-ல்தான் என்கிற போது அதற்கு முன்னரே மோடி எப்படி டிஜிட்டல் பேட் வைத்திருந்தார் என கூறுகிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். அதில், மோடி இ மெயிலை முதன் முதலில் யாருக்கு அனுப்பினார் எனவும் மோடியின் இ மெயில் ஐடி டீ ஸ்டாலா? எனவும் கிண்டலடித்தும் உள்ளனர்.

தேடுதல் வேட்டை தீவிரம்
மோடியின் இந்த பேட்டியைத் தொடர்ந்து இப்போது கூகுள்தான் படாதபாடு படுகிறது. இந்தியாவுக்கு டிஜிட்டல் கேமரா எப்பொழுது அறிமுகமானது? இ மெயில் இந்தியாவுக்கு வந்ததது எப்பொழுது? என தேடித் தேடி ட்விட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர் நெட்டிசன்ஸ்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications