கட்சியை பலப்படுத்த போறோம்... ராகுலிடம் இதுதாங்க பேசினோம்.. புதிய தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி
டெல்லி: தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது என்பது குறித்து ராகுல் காந்தியிடம் ஆலோசித்ததாக தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவரான கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திருநாவுக்கரசர் டிஸ்மிஸ் செய்யப்பட்டு, காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். மேலும், செயல் தலைவர்களாக வசந்த்குமார், ஜெயக்குமார், விஷ்ணு பிரசாத், மயூரா ஜெயக் குமார் ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த கே.எஸ்.அழகிரி தமிழகம், புதுச்சேரியில் வரும் லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதச்சார்பற்ற கட்சிகள் வெற்றி பெற பாடுபடுவேன் என்று கூறினார்.
இந் நிலையில் டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:தமிழக காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்ட நிர்வாகிகள் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர்.
இது குறித்து அவர் கூறியதாவது:டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்து பேசியிருக்கிறோம். தற்போதைய அரசியல் சூழ்நிலை, தேர்தல் குறித்து விவாதித்துள்ளோம்.
கட்சியை பலப்படுத்த போறோம்... ராகுலிடம் இதுதாங்க பேசினோம்.. புதிய தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி #KSAlagiri #RahulGandhi pic.twitter.com/Ezqj7XWAzn
— Oneindia Tamil (@thatsTamil) February 4, 2019
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை எவ்வாறு பலப்படுத்துவது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை தமிழக அரசு ஒடுக்கியிருப்பதை பற்றி ராகுல் காந்தியிடம் எடுத்துக் கூறியிருக்கிறோம். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்துச் செல்பவர்கள்.
அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக அவர்களின் வேலைநிறுத்தத்தை ஒடுக்குவது, ஊதியத்தை பிடித்தம் செய்வது, பணியிடமாற்றம் செய்வது போன்ற ஜனநாயக விரோத செயல்களில் தமிழக அரசு செய்துள்ளது என்று கூறினார்.












Click it and Unblock the Notifications