ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டுக்கு தொடரும் தடை.. இந்தியாவின் முடிவு என்ன? வல்லுநர் குழு பரிந்துரை
டெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளால் ரத்த உறைத்தல் பிரச்னை ஏற்படுவதில்லை என்று வல்லுநர் குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது.
இந்தியாவில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் இரண்டாம் கட்டமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

இதற்காக பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசியைத்தான் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
இந்நிலையில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி எனப் பல நாடுகளும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை விதித்தது.
இதனால் இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பாதுகாப்புதன்மை குறித்து ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ரத்த உறைதல் பிரச்சினை அதிகரிப்பதில்லை என்று அந்த வல்லுநர் குழு தனது முடிவை மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அளித்துள்ளது.
முன்னதாக உலக சுகாதார அமைப்பும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் பாதிப்பு இல்லை என்றும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 32.53 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன, ஒட்டுமொத்தமாக இதுவரை ஐந்து கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications