ஐரோப்பிய நாடுகளில் கோவிஷீல்டுக்கு தொடரும் தடை.. இந்தியாவின் முடிவு என்ன? வல்லுநர் குழு பரிந்துரை
டெல்லி: இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளால் ரத்த உறைத்தல் பிரச்னை ஏற்படுவதில்லை என்று வல்லுநர் குழு தனது பரிந்துரையை அளித்துள்ளது.
இந்தியாவில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 60 வயதைக் கடந்தவர்களுக்கும் 45 வயதைக் கடந்து உடல்நிலை பாதிப்பு உடையவர்களுக்கும் இரண்டாம் கட்டமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது.

இதற்காக பாரத்பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் நிறுவனத்தின் கோவிஷீட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்ட் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா நிறுவனங்கள் இணைந்து தயாரித்த தடுப்பூசியைத்தான் கோவிஷீல்டு என்ற பெயரில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்கிறது.
இந்நிலையில் ஆஸ்ட்ராஜெனகா தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களில் சிலருக்கு ரத்த உறைதல் பிரச்சினை ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி எனப் பல நாடுகளும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்குத் தடை விதித்தது.
இதனால் இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தடை விதிக்கப்படும் என்ற தகவல் பரவியது. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பாதுகாப்புதன்மை குறித்து ஆராய உயர்மட்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளால் ரத்த உறைதல் பிரச்சினை அதிகரிப்பதில்லை என்று அந்த வல்லுநர் குழு தனது முடிவை மருந்து கட்டுப்பாட்டு வாரியத்திற்கு அளித்துள்ளது.
முன்னதாக உலக சுகாதார அமைப்பும் ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியால் பாதிப்பு இல்லை என்றும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தலாம் என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 32.53 லட்சம் பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன, ஒட்டுமொத்தமாக இதுவரை ஐந்து கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.
-
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
"இனி அவர்கள் முகத்தையே பார்க்க விரும்பல".. திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி GR சுவாமிநாதன் காட்டம் -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை?












Click it and Unblock the Notifications