Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிறிஸ்தவம், இஸ்லாமில் தீண்டாமை இல்லை.. மதம் மாறினால் பட்டியலின அந்தஸ்து தேவையில்லை- மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்து மதத்தில் இருப்பதைபோல் இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களில் ஜாதிய தீண்டாமை இல்லை என்பதால், மதம் மாறிய தலித்துகளுக்கு பட்டியலின அந்தஸ்து வழங்க வேண்டிய அவசியம் இல்லை என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இந்து மதத்தில் இருந்து இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதங்களுக்கு மாறிய தலித்துகளுக்கும் எஸ்.சி. எனப்படும் பட்டியலின அந்தஸ்து வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

மதம் மாறிய பட்டியலின மக்கள் எஸ்.சி. இடஒதுக்கீட்டு பயன்களை அனுபவிக்கும் வகையில் எஸ்.சி.யாக அவர்களை வகைப்படுத்த வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மத்திய அரசு பதில் மனு

மத்திய அரசு பதில் மனு

இந்த மனு நீதிபதிகள் எஸ்.கே.கவுல் மற்றும் ஏ.எஸ்.ஓகா மற்றும் விக்ரம் நாத் ஆகியோரது அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசிடம் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தனர். இதனை அடுத்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் மனுவை தாக்கல் செய்து உள்ளது.

அடக்குமுறைகள்

அடக்குமுறைகள்

அந்த மனுவில், "பல நூறு ஆண்டுகளாக இந்து மதத்தில் அடக்குமுறைகள் இருந்து வந்தன. ஆனால், இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்களில் அந்த அடக்குமுறைகள் இருந்ததற்கான ஆதாரப்பூர்வமான சான்றுகள் எதுவும் இல்லை. எனவே அவர்களுக்கு தாழ்த்தப்பட்டோருக்கான அந்தஸ்து வழங்குவது அவசியம் இல்லை." என குறிப்பிடப்பட்டு உள்ளது.

அரசியலமைப்பு ஆணை

அரசியலமைப்பு ஆணை

கடந்த 1950 வது ஆண்டில் பட்டியல் சாதிகள் தொடர்பான அரசியலமைப்பு ஆணையில், இந்து, பவுத்தம் மற்றும் சீக்கிய மதங்களை சேர்ந்தவர்களுக்கே பட்டியல் சாதி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே இது அரசியலமைப்புக்கு எதிரானது அல்ல என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டு உள்ளது.

இடஒதுக்கீடு

இடஒதுக்கீடு

மேலும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27% இடஒதுக்கீடுக்கு தகுதிபெற்றவர்கள் என்று தெரிவித்து இருக்கும் மத்திய அரசு, மெட்ரிக் ஸ்காலர்ஷிப் கல்வி உதவித்தொகையும் அவர்களுக்கு வழங்கப்படுவதாக சுட்டிக்காட்டி உள்ளது.

பல்வேறு பலன்கள்

பல்வேறு பலன்கள்

அத்துடன் தேசிய பிற்படுத்தப்பட்டோர் நிதியத்தால் நிர்வகிக்கப்படும் இதர வருவாய் ஈட்டும் செயல்பாடுகள் உட்பட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களின் பலன் அடைவதற்கும் இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் தகுதியுடையவர்கள் என தனது பதில் மனுவில் மத்திய அரசு குறிப்பிட்டு இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+