மருத்துவமனையில் வென்டிலேட்டரும் இல்லை.. ஆம்புலன்சும் இல்லை..உதவி கிடைக்காமல் கமாண்டோ உயிரிழந்த சோகம்
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ சரியான நேரத்தில் வென்டிலேட்டர் மற்றும் ஆம்புலன்ஸ் உதவி கிடைக்காததால் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா 2ஆம் அலை காரணமாக நாட்டில் தினசரி வைரஸ் பாதிப்பு மூன்று லட்சத்தைக் கடந்துள்ளது.
மேலும், ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடைபெற்றுக் கொண்டே தான் இருக்கிறது. இந்நிலையில் சரியான நேரத்தில் வென்டிலேட்டர் கிடைக்காததால் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ
தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோவாக இருந்தவர் பிகே ஷா. 57 வயதான இவருக்குக் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர், தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், அவர் க்ரேட்டர் நொய்டாவிலுள்ள சிஏபிஎஃப் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை, உடல்நிலை மெல்ல தேறிவந்தது. இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை அவரது திடீரென உடல்நிலை மோசமடைந்தது.

வென்டிலேட்டர் இல்லை
இதையடுத்து அவருக்கு வென்டிலேட்டர் சிகிச்சை அளிக்கும்படி தேசியப் பாதுகாப்புப் படையினர் கேட்டுள்ளனர். இருப்பினும் துரதிர்ஷ்டவசமாக அந்த மருத்துவமனையிலிருந்த இரண்டு வென்டிலேட்டர்களும் செயல்படவில்லை. இதைத் தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் வென்டிலேட்டர் உதவி கோரப்பட்டது. குறைந்த நேரத்தில் வென்டிலேட்டர் ஏற்பாடு செய்ய முடியாது என எய்ம்ஸ் மருத்துவமனையும் கை விரித்து விட்டது.

ஆம்புலன்சும் இல்லை
இந்தச் சூழ்நிலையில், நொய்டாவில் உள்ள ஃபோர்டிஸ் மருத்துவமனை, தங்களிடம் வென்டிலேட்டர் இருப்பதாகத் தெரிவித்து. இருந்தாலும்கூட அதில் மற்றொரு சிக்கல் இருந்தது. ஏனென்றால் சிஏபிஎஃப் மருத்துவமனையில் இருந்து அவரை ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல தேவையான சிறப்பு ஆம்புலன்ஸ் வசதியும் அங்கு இல்லை. சிறப்பு ஆம்புலன்ஸ் தேசிய காவல் படை மையத்திலிருந்து வரும் வரை அவர் மருத்துவமனையிலேயே காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

கமாண்டோ உயிரிழந்தார்
ஆம்புலன்ஸ் வந்ததும், அவர் உடனடியாக ஃபோர்டிஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இருப்பினும், காலை சுமார் 3 மணியளவில் மாரடைப்பு ஏற்பட அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரை காப்பாற்ற மருத்துவர்கள் முயன்றும் முடியவில்லை. வென்டிலேட்டர் மற்றும் ஆம்புலன்ஸ் சரியான நேரத்தில் கிடைக்காததால் நாட்டுக்குச் சேவை செய்யும் தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோ உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications