ஓமிக்ரான் வைரஸ்: இந்தியாவில் 3ஆவது அலையை தூண்டுமா?.. விஞ்ஞானிகள் எச்சரிக்கை
டெல்லி: புதிய வகை ஓமிக்ரான் வைரஸால் இந்தியாவில் 3ஆவது அலையை தூண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா முதல் அலையை விட இரண்டாவது அலை மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இந்த இரண்டாவது அலையில் ஏராளமானோர் உயிரிழந்தனர்.
இதனால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என சொல்லப்பட்ட நிலையில் தடுப்பூசி போடும் முயற்சியை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மாநில அரசுகள் இலவசமாக தடுப்பூசிகளை செலுத்துகிறது.

கொரோனா
இந்த நிலையில் இந்தியாவில் கொரோனா 3ஆவது அலை ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எப்போதுமே ஒரு வேரியண்ட் வந்தால்தான் 3ஆவது அலை தீவிரமடையும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்தனர். அந்த வகையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் உருவாகியுள்ளது.

டெல்டா வேரியண்ட்
இது இந்தியாவில் உருவான டெல்டா வேரியண்ட்டை விட மிகவும் வீரியமிக்கதாக சொல்லப்படுகிறது. 50 பிறழ்வுகள் இருப்பதால் இது கொடியது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த புதிய வைரஸால் இனி வரும் நாட்களில் கொரோனா 3ஆவது அலை உருவாகலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா
இதுகுறித்து தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஆலோசகர் டாக்டர் நரேஷ் புரோகித் கூறுகையில் ஒரு வைரஸ் எளிதில் பாதிக்கக்கூடிய ஒரு உடலில் நுழைகிறபோது, அது நகல் எடுக்கத்தொடங்குகிறது. நோய்த்தொற்றின் பரவலுடன் நகலெடுப்பதும் அதிகரிக்கிறது. ஒரு வைரஸ் கொண்டிருக்கிற பிறழ்வு, உருமாற்றம் ஆகும். புதிதாக கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான் என பெயரிடப்பட்டுள்ள பி.1.1.529 வைரஸ், இந்தியாவில் 3-வது அலையை ஏற்படுத்தலாம்.

வைரஸ்
தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ். தற்போதுள்ள உருமாறிய வைரஸ்களை விட ஸ்பைக் புரதத்தில் கூடுதல் பிறழ்வுகளை கொண்டுள்ளது என்பதால் தடுப்பூசியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளை எழுப்புகிறது. அதாவது தற்போதுள்ள தடுப்பூசிகளால் இந்த வைரஸை கட்டுப்படுத்த முடியாது என சொல்கிறார்கள்.
Recommended Video

ஓமிக்ரான் வைரஸ்
புதிய வைரஸான ஓமிக்ரானை பொருத்தமட்டில் அது பரவும் தன்மை, தடுப்பூசி செயல்திறன் குறித்து எந்த ஆதாரமும் இல்லை. எனினும் மக்கள் எப்போதும் எச்சரிக்கையாகவும் கொரோனா விதிமுறைகளை பின்பற்றியும் இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தியுள்ளார். இனி வரும் நாட்கள் பண்டிகை காலம் என்பதால் கூடுதல் கவனம் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications