Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛‛வெட்கி தலைகுனியனும்’’.. கார்கேவால் ராஜ்யசபாவில் கண்சிவந்த ஜெகதீப் தன்கர்! கடும் கண்டனம் - பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற ராஜ்யசபாவில் இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை, சபையின் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜெகதீப் தன்கர் அவரது பேச்சை ஏற்க முடியாது எனக்கூறி கடும் கண்டனம் தெரிவித்தார். அதோடு வெட்கி தனைகுனிய வேண்டும் என்ற வார்த்தையை பயன்படுத்தி பரபரப்பை கிளப்பினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாள் கூட்டம் இன்று நடந்தது. வழக்கம்போல் லோக்சபா, ராஜ்யசபா காலை 11 மணிக்கு தொடங்கியது. ராஜ்யசபாவை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமையேற்று நடத்தினார்.

Our heads should go in shame, J agdeep Dhankhar slams Mallikarjun Kharge in Rajya Sabha

இந்த வேளையில் உத்தர பிரதேச மாநிலத்தில் செயல்பட்டு வரும் ஆர்எல்டி கட்சியின் தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான ஜெயந்த் சவுத்ரி பேச எழுந்தார். அப்போது அவருக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதாவது ஆர்எல்டி கட்சி உத்தர பிரதேசத்தில் ‛இந்தியா' கூட்டணியில் இருந்த நிலையில் நேற்று திடீரென்று பாஜகவுடன் கைகோர்த்தது. பாஜக கூட்டணியில் உத்தர பிரதேச மாநிலத்தில் 2 லோக்சபா தொகுதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ‛இந்தியா' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் மற்றும் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி அதிர்ச்சியடைந்துள்ளது. இத்தகைய சூழலில் தான் ராஜ்யசபாவில் இந்த சம்பவம் அரங்கேறியது.

அதாவது ஆர்எல்டி கட்சியின் தலைவராக உள்ள ஜெயந்த் சவுத்ரியின் தாத்தா சவுத்ரி சரண் சிங் இந்தியாவின் முன்னாள் பிரதமர் ஆவார். இவருக்கு சமீபத்தில் மத்திய அரசு ‛பாரத ரத்னா' விருது அறிவித்தது. இந்த விருதுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேரனான ஜெயந்த் சவுத்ரி இன்று ராஜ்யசபாவில் பேச தொடங்கினார்.

அப்போது காங்கிரஸின் மல்லிகார்ஜுன கார்கே உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மல்லிகார்ஜுன கார்கே எழுந்து ‛‛விருது அறிவிக்கப்பட்ட அனைவரையும் நான் மதிக்கிறேன். ஜெயந்த் சவுத்ரியை எந்த விதியின் கீழ் பேச அனுமதி கொடுத்துள்ளீர்கள். ஒரு உறுப்பினருக்கு பேச அனுமதி கொடுப்பது என்பது உங்களின் உரிமையாக இருக்கலாம். இருப்பினும் அது நியாயமாக இருக்க வேண்டும். ஒருபுறம் எங்களை பேச அனுமதிக்க வேண்டும். இதனால் எம்பி ஒருவர் பேச விரும்பினால் அவர் எந்த விதியின் கீழ் பேசுகிறார் என்பது எனக்கு தெரிய வேண்டும்'' எனக்கூறினார்.

இதனை கேட்ட ஜெகதீப் தன்கர் கோபமானார். இயைதடுத்து அவர், ‛‛இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த கூடாது. பொறுத்து கொள்ளவும் முடியாது. சவுத்ரி சரண் சிங்கை நீங்கள் அவமானப்படுத்தும் வகையில் பேசுவதை என்னால் பொறுத்து கொள்ள முடியாது. பொதுமக்களுக்காகவும், விவசாயத்துக்காக அவர் பணியாற்றினார். இப்போது ஒவ்வொரு விவசாயியையும் காயப்படுத்துகிறீர்கள். இதனை நினைத்து நாம் வெட்கத்தில் தலை குனிய வேண்டும்'' என கடிந்து கொண்டார். இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ராஜ்யசபாவில் கடும் அமளி ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+