பாகிஸ்தான் சைபர் அட்டாக்.. பாதுகாப்பு துறை நிறுவனங்களின் ‛வெப்சைட்டுகள்’ முடக்கம்.. டேட்டா திருட்டு?
டெல்லி: நம் நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் தான் மத்திய பாதுகாப்பு துறை நிறுவனங்களின் இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள் ஹேக் செய்து தரவுகளை திருடி உள்ளதாக தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கவராதிகள் தாக்குதல் நடத்திய 26 சுற்றுலா பயணிகளை கொன்றனர். இந்த கோர தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத அமைப்பான ‛தி ரெசிஸ்டண்ட் ஃப்ரண்ட்' பொறுப்பேற்றுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்க நம் படை வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

இதனால் பாகிஸ்தான் நடுங்கிப்போய் உள்ளது. இதற்கிடையே தான் நம் நாட்டுக்கு எதிராக பல்வேறு சதிவேலைகளை பாகிஸ்தான் தொடங்கி உள்ளது. குறிப்பாக சைபர் தாக்குதலை பாகிஸ்தான் ஹேக்கர்கள் முன்னெடுத்துள்ளனர்.
மிலிட்டர் இன்ஜினியர் சர்வீசஸ் மற்றும் மனோகர் பாரிக்கர் பெயரில் இயங்கும் பாதுகாப்பு துறையின் படிப்பு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் ( Manohar Parrikar Institute of Defence Studies and Analysis) மற்றும் ஆர்மர்ட் வெஹிள் நிகம் லிமிடெட் உள்ளிட்ட பாதுகாப்பு துறை சார்ந்த அமைப்புகளின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதன்படி இன்று மத்திய பாதுகாப்பு துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் சில முக்கிய நிறுவனங்களில் இணையதளங்கள் ‛ஹேக்' செய்யப்பட்டுள்ளது. அதாவது மிலிட்டர் இன்ஜினியர் சர்வீசஸ் மற்றும் மனோகர் பாரிக்கர் பெயரில் இயங்கும் பாதுகாப்பு துறையின் படிப்பு மற்றும் பகுப்பாய்வு நிறுவனம் ( Manohar Parrikar Institute of Defence Studies and Analysis) மற்றும் ஆர்மர்ட் வெஹிள் நிகம் லிமிடெட் உள்ளிட்ட பாதுகாப்பு துறை சார்ந்த அமைப்புகளின் இணையதளங்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இணையதளங்களை முடக்கவிட்டதாக பாகிஸ்தான் ஹேக்கர்கள் பதிவு செய்துள்ளனர். அதன்படி ஆர்மர்ட் வெஹிள் நிகாம் லிமிடெட்டின் இணையதள பக்கத்தில் நம் நாட்டின் டாங்கியில் பாகிஸ்தான் கொடியை ஒட்டி பதிவிட்டுள்ளனர். அதேபோல் மனோகர் பாரிக்கர் பாதுகாப்பு துறை ஆய்வு நிறுவனத்தின் இணையதள பக்கத்தில் 1,600 பயனர்களிடம் இருந்து 10 ஜிபிக்கும் மேற்பட்ட தரவுகளை பெற்றுள்ளோம் என்று பதிவு செய்துள்ளனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க நம் நாடு தீவிரமாக தயாராகி வருகிறது. இதற்கிடையே தான் அவ்வப்போது பாகிஸ்தான் ஹேக்கர்கள் நம் ராணுவ இணையதளங்களை முடக்கும் வகையில் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர். இந்த முயற்சிகள் அனைத்தும் தடுக்கப்பட்ட நிலையில் இன்று சில இணையதளங்களை பாகிஸ்தான் ஹேக்கர்கள் அணுகி உள்ளனர். இதில் இருந்து டேட்டாக்களை திருடி உள்ளதாக பாகிஸ்தான் ஹேக்கர்கள் கூறியிருந்தாலும் கூட அதுபற்றி நம் பாதுகாப்பு துறை நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுதவிர பாகிஸ்தான் ஹேக்கர்களின் நடவடிக்கைகளை தீவிரமாக நம் நாடு கண்காணிக்க தொடங்கி உள்ளதோடு, ஹேக்கர்களால் ஹேக் செய்ய முடியாத வகையில் நம் பாதுகாப்பு துறை சார்ந்த இணையதளங்களில் நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டுள்ளது. தற்போதைய சூழலில் இந்த பாகிஸ்தானின் சைபர் அட்டாக் பற்றி நம் நாட்டின் பாதுகாப்பு துறை சார்பில் எந்த விளக்கமும் தரப்படவில்லை. பாதுகாப்பு துறை நிபுணர்கள் குறிப்பிட்ட இணையதளங்களில் இருந்து தரவுகள் ஏதேனும் திருடப்பட்டுள்ளதா? என்பது பற்றி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னதாக ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ராணுவப் பள்ளி (APS), APS ராணிக்கேத், ராணுவ நல வீட்டுவசதி அமைப்பு (AWHO) உள்ளிட்டவற்றின் டேட்டோபேஸ் இணையதளங்கள் மற்றும் இந்தியா விமானப்படையின் வேவைாய்ப்பு போர்ட்டல் உள்ளிட்டவை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி












Click it and Unblock the Notifications