"மண்ணும் இமயமலை எங்கள் மலையே.." பாரதியார் கவிதையை மேற்கோள்காட்டி பேசிய மோடி
டெல்லி: கொரோனாவிற்கு பிறகு உலகின் சூழ்நிலை மாறியுள்ளது. இந்தியாவில் மத்திய அரசின் திட்டங்களால் ஏழை மக்கள் சொந்த வீடு கட்டி லட்சாதிபதியாக மாறி வருகின்றனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31-ந் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். சுமார் 50 நிமிடங்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை நிகழ்த்தினார்.
ஜனாதிபதியின் இந்த உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. வழக்கமான அமளி துமளி இல்லாமல் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இம்முறை மத்தியில் ஆளும் பாஜக அரசை மிக கடுமையாக, ஆக்ரோஷமாக விமர்சித்தனர்.
இந்த விவாதங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இன்று மாலை லோக்சபாவில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். எதிர்க்கட்சிகளின் காட்டமான விமர்சனங்களுக்கு பிரதமர் என்ன பதில் அளிப்பார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
You can oppose me, but why are you (Congress) opposing the Fit India Movement and other schemes? No wonder you were voted out in many states years ago...I think you have made up your mind not to come to power for the next 100 years: PM pic.twitter.com/APo12ubXcI
— ANI (@ANI) February 7, 2022