ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் கையில் இருந்த பெகாசஸ் அறிக்கையை பிடுங்கி கிழித்த திரிணாமுல் எம்.பி.!
டெல்லி: நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடர், ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெறும். மொத்தம் 19 நாட்கள் அதாவது அமர்வுகள் இந்த கூட்டத் தொடரில் இருக்கும்.
நாடாளுமன்றத்தில் ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் நடக்க ஒத்துழைக்குமாறு முன்னதாக, பிரதமர் மோடி அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா விவகாரத்தில் மத்திய அரசு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது, விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்துவது, எதிர்க்கட்சியினர், பத்திரிக்கையாளர்கள் மொபைல் போன்கள் ஒட்டுக் கேட்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு உள்ளிட்டவை குறித்து எதிர்க்கட்சிகள் புயலை கிளப்ப திட்டமிட்டுள்ளனர்.
I have urged all Floor Leaders that if they can take out some time tomorrow evening then I would like to give them all detailed information regarding the pandemic. We want discussion inside the Parliament as well with the Floor Leaders outside the Parliament: PM Modi#COVID19 pic.twitter.com/rJ5tul3j9c
— ANI (@ANI) July 19, 2021