நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடக்கம்.. 3 வேளாண் சட்டங்கள் வாபஸ்
டெல்லி: பெரும் பரபரப்புகளுக்கு இடையே, நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சட்டமசோதா இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் இன்று தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்நாளான இன்று, மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறும் சட்ட மசோதாவை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் லோக்சபாவில் இன்று தாக்கல் செய்கிறார். இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு மாநிலங்களவைக்கு அனுப்பி வைக்கப்படும்.
அனைத்து வகை தனியார் கிரிப்டோ கரன்சிகளை ஒழுங்குபடுத்துவது, தனிநபர் டேட்டா பாதுகாப்பு, வங்கி சீர்திருத்தம் உள்பட 26 புதிய சட்டமசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பெகாசஸ் விவகாரம், பெட்ரோல், டீசல் விலை உயர்வு, விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை ஆகியவற்றை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதால் குளிர் கால கூட்டத் தொடரில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications