இந்தியா மாநிலங்களின் ஒன்றியமா? மன்னராட்சி நாடா? குழப்பிவிட்டது பாஜக: ராகுல் காந்தி அட்டாக்
டெல்லி: இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியமா? இல்லை மன்னராட்சி நாடா? என்கிற குழப்பத்தை பாஜக உருவாக்கிவிட்டது என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார்.
#WATCH | "The Judiciary, the Election Commission, Pegasus, these are all instruments of destroying the voice of the union of states," says Congress MP Rahul Gandhi in Lok Sabha pic.twitter.com/BQzxXf9VM7
— ANI (@ANI) February 2, 2022
நாடாளுமன்ற லோக்சபாவில் ஜனாதிபதி உரை மீதான விவாதத்தின் போது ராகுல் காந்தி பேசியதாவது: மாநிலங்களின் குரல்களை பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒடுக்கியிருக்கிறது பாஜக.

பாஜகவால் குழப்பம்
நாடு முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது பாஜக. நீதித்துறை, தேர்தல் ஆணையம், பெகாசஸ் அத்தனையுமே மாநிலங்களின் குரல்களை ஒடுக்குகின்றன. பெகாசஸ் மூலம் நீங்கள் ஒட்டுக் கேட்கிறீர்கள்.. இது தமிழ்நாட்டு மக்கள் மீதான தாக்குதல்.. இது அஸ்ஸாம் மக்கள் மீதான தாக்குதல். கேரளா மக்கள் மீதான தாக்குதல். மேற்கு வங்க மக்கள் மீதான தாக்குதல் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாநிலங்கள் ஒன்றியமா? மன்னராட்சி நாடா?
இது என்ன மாநிலங்களின் ஒன்றியமா? அல்லது மன்னராட்சி நாடா? என்கிற குழப்பத்தை நாடு முழுவதும் உருவாக்கி வைத்திருக்கிறது பாஜக. ஜனநாயக கட்டமைப்புகளின் மீதான இத்தகைய தாக்குதலுக்கு மாநிலங்களிடம் இருந்து பதில்கள் வரத்தான் போகின்றன.

2 இந்தியாவாக பிரிவினை
இந்த நாட்டின் 40 கோடி மக்களின் சொத்துகள் 10 பணக்காரர்களிடம் இருக்கிறதே.. இதை செய்தது யார்? பிரதமர் நரேந்திர மோடிதான் இந்த நிலைமையை உருவாக்கினார். இந்தியாவை ஏழைகளின் இந்தியா, பணக்காரர்களின் இந்தியா என பிரித்து வைத்திருக்கிறது பாஜக.
Recommended Video

நாட்டுக்கு ஆபத்து
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் 10 ஆண்டுகால ஆட்சியில் 27 கோடி மக்களை வறுமைக் கோட்டில் இருந்து மீட்டெடுத்தோம். இது உண்மையான புள்ளிவிவரம். ஆனால் பாஜகவோ 23 கோடி இந்தியர்களை வறுமையில் தள்ளிவிட்டிருக்கிறது. இந்தியா என்பது ஒரு மன்னராட்சி நாடு அல்ல. பல்வேறு கலாசாரங்கள், மொழிகளால் கட்டமைக்கப்பட்ட ஒன்றியம். ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒருநபர் ஆட்சி செய்யவே முடியாது. இந்தியா இப்போது மிகப் பெரும் ஆபத்தில் இருக்கிறது. நம்மை சுற்றியுள்ள நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறோம். நேபாளம், ஆப்கானிஸ்தான், சீனா என பல நாடுகள் நம்மை சூழ்ந்து நிற்கின்றன. சீனாவுக்கு தாங்கள் செய்வது என்ன என்பது குறித்த தெளிவான பார்வை உள்ளது. சீனாவையும் பாகிஸ்தானையும் மிக நெருக்கமாக்கி வைத்திருக்கிறது பாஜக. இது மிகவும் ஆபத்தானது. இந்திய மக்களுக்கு எதிரான மிகப் பெரிய குற்றம் இது. சீனா மிகப் பெரிய சதித்திட்டத்துடன் நிற்கிறது என திட்டவட்டமாக சொலல் முடியும். இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications