திடீரென சரிந்த "சீட்டா..!" குழம்பிப்போன விமானி.. அருணாச்சல பிரதேச ஹெலிகாப்டர் விபத்தில் பைலட் பலி
டெல்லி: அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள ஷாக் சம்பவம் ராணுவத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய ராணுவத்தை நவீனப்படுத்தும் நடவடிக்கையை அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. இதற்காகப் பல புதிய ஆயுதங்களை அரசு தொடர்ந்து கொள்முதல் செய்து வருகிறது.
இருந்த போதிலும், சில எதிர்பாராத சூழ்நிலைகளில் விபத்து ஏற்படுவது தொடர்ந்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான் அருணாச்சல பிரதேசத்தில் நடந்து உள்ளது.

ஹெலிகாப்டர் விபத்து
அருணாச்சல பிரதேசத்தில் இன்று காலை ராணுவத்தின் சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதில் பைலட் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மோசமாகக் காயமடைந்த மற்றொரு வீரர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்து உள்ளது. இன்று காலை 10 மணி அளவில் தவாங் பகுதி அருகே ராணுவ விமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

உயிரிழப்பு
இந்த சீட்டா ரக ஹெலிகாப்டரில் ஒரே நேரத்தில் இரண்டு பேர் பயணிக்க முடியும். விபத்து குறித்த தகவல் கிடைத்த உடன் சம்பவ இடத்திற்கு விரைந்த சென்ற ராணுவத்தினர், ஹெலிகாப்டரில் சிக்கி இருந்த இரு விமானிகளையும் மீட்டு அருகே இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும் லெப்டினன்ட் கர்னல் சவுரப் யாதவ் பலத்த காயமடைந்த இருந்ததால் சிகிச்சையின் போது அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உத்தரவு
துணை விமானிக்கு இப்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை விபத்திற்கான காரணங்கள் உறுதியாகத் தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாகவும் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் ராணுவம் உத்தரவிட்டு உள்ளது.

விபத்துகள்
முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் தான் ஜம்மு காஷ்மீரில் எல்லை அருகே ராணுவத்தின் மற்றொரு சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. அதிலும் இதேபோல விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். துணை விமானி பலத்த காயமடைந்தார். அதேபோல கடந்த ஆண்டு இறுதியில். தமிழகத்தில் விமானப்படையின் மிக் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதில் முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் உட்பட 12 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications