உ.பி, பீகாரில் இடிமின்னலுக்கு பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரிப்பு- பிரதமர் இரங்கல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இடி, மின்னலுக்கு பலியானோர் எண்ணிக்கை 116 ஆக உயர்ந்துள்ளது.
வட இந்திய மாநிலங்களில் பயங்கரமான இடி மற்றும் மின்னலுடன் கனமழை கொட்டி வருகிறது. பல இடங்களில் சூறை காற்றும் வீசி வருகிறது.

இடி, மின்னல் தாக்கியதில் பீகார் மற்றும் உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஒரே நாளில் 107 பேர் நேற்று மரணமடைந்தனர். இன்று இந்த எண்ணிக்கை 116 ஆக அதிகரித்திருக்கிறது.
வட இந்தியாவில் மழை மேலும் தீவிரமடையும் என்று சிவப்பு நிற எச்சரிக்கையையும் வானிலை மையம் விடுத்துள்ளது. இதனிடையே பீகாரில் உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு தலா ரூ4 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பீகார், உத்தரப்பிரதேசத்தில் இடி மின்னலால் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலை பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
Recommended Video
Thunderstorm Bihar : ஒரே நாளில் இடி தாக்கி 107 பேர் பலி.. வட கிழக்கு மாநிலங்களுக்கு Rain Red Alert












Click it and Unblock the Notifications