ஜி20 உச்சி மாநாடு: இத்தாலி பிரதமருடன் பிரதமர் மோடி சந்திப்பு.. ஆலோசிக்கப்பட்டது என்ன?
டெல்லி: டெல்லியில் நடைபெற்று வரும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் ஜியார்ஜியோ மெலோனி பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா, ரஷ்யா, அமெரிக்கா, சீனா உள்பட 20 நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டில் இந்த மாநாடு இந்தியாவில் நடைபெறுகிறது. இந்தியா தலைமை ஏற்று இந்த மாநாடை நடத்துகிறது. இதன் காரணமாக கடந்த ஓராண்டாக இந்தியாவில் பல்வேறு இடங்களில் ஜி20 நாடுகளின் பிரதிநிதிகளின் கூட்டம் என்பது நடந்து வந்தது.

இதேபோல் ஜி20 உச்சி மாநாட்டை டெல்லியில் மிக பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்தது. டெல்லியில் புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபத்தில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதன்படி திட்டமிட்டப்படி ஜி20 அமைப்பின் 2 நாள் உச்சி மாநாடு இன்று தொடங்கியது. அமெரிக்க அதிரபர் ஜோ பைடன், பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் உள்பட ஏராளமான தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொண்டனர்.
இந்த மாநாட்டுக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனியும் வருகை தந்தார். இந்த நிலையில் ஜி 20 உச்சி மாநாட்டுக்கு இடையே இத்தாலி பிரதமர் ஜார்ஜியோ மெலோனி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த இந்த சந்திப்பின் போது பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications