புதிய விவசாய சட்டங்கள் விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளது: பிரதமர் மோடி
டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய விவசாய சட்டங்கள், விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று நாட்டு மக்களிடையே முற்பகல் 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த மன்கி பாத் நிகழ்ச்சியில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி கருத்துகளை முன்வைத்து வருகிறார்.
கொரோனா பரவல், கொரோனா லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு மன் கி பாத் நிகழ்ச்சிகள் மூலம் அறிவுறுத்தல்களை விடுத்திருந்தார். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் முன்மாதிரியான செயற்பாட்டாளர்களை அடையாளம் கண்டு அவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியும் வருகிறார்.

அன்னபூரணி சிலை
இன்று முற்பகல் 11 மணிக்கு பிரதமர் மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றினார். அப்போது பிரதமர் மோடி பேசியதாவது: கனடாவில் இருந்து மிகவும் பழமையான அன்னபூரணி தேவி சிலை மீட்கப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1913-ம் ஆண்டு இந்த சிலை திருடப்பட்டது. தற்போது இந்த சிலை திரும்பவும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இது பெருமிதத்துக்குரிய தருணம். ஒவ்வொரு இந்தியரும் பெருமைப்பட வேண்டிய தருணமும் கூட.

இந்தியாவின் கலாசார தூதர்கள்
இந்தியாவின் கலாசாரம் ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. இந்தியாவுக்கே பலர் வந்து இங்கே வந்து தங்கி வாழ்க்கையை அர்ப்பணித்திருக்கின்றனர். மேலும் பலர் இந்தியாவின் கலாசார தூதர்களாக சொந்த நாட்டுக்கு திரும்பியும் உள்ளனர்.

கோவையில் வேதம் கற்ற ஜோனஸ்
பிரேசிலை சேர்ந்த ஜோனஸ் மசேட்டி மெக்கானிக்கல் பொறியியல் பட்டதாரி; பங்கு சந்தையில் பணிபுரிந்த ஜோனஸ் இந்தியாவின் கலாசாரத்தின் பால் ஈர்க்கப்பட்டார்; இந்தியாவின் வேதங்கள் மீது அவருக்கு பற்றுதல் ஏற்பட்டது; தமிழகத்தின் கோவையில் ஆர்ஷ வித்யா குருகுலத்தில் 4 ஆண்டுகள் வேதங்களை கற்றார். ஜோனஸ் இப்போது விஸ்வநாத் என அழைக்கப்பட்டு வருகிறார். பிரேசிலில் ஒரு மலைப்பகுதியில் வேதங்களையும் பகவத் கீதையும் கற்று தருகிறார். விஸ்வவித்யா என்ற அமைப்பையும் ஜோனஸ் நடத்தி வருகிறார். நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் இளம் எம்.பி. கவுரவ் சர்மா சமஸ்கிருதத்தில் பதவி பிராமணம் செய்தது பாராட்டுக்குரியது.

விவசாய சட்டங்களின் நன்மைகள்
விவசாய சீர்திருத்தங்களுக்கு நாடாளுமன்றம் சட்டப்பூர்வமான ஒப்புதல் அளித்துள்ளது. விவசாய சீர்திருத்தங்களானது புதிய உரிமைகளை விவசாயிகளுக்கு கொடுத்துள்ளது. விவசாயிகளுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கி உள்ளது. விவசாயம் சார்ந்த பணிகளில் புதிய பரிமாணங்களை ஏற்படுத்தி தந்துள்ளது. விவசாயிகளுக்கான புதிய வாயிற்கதவுகளை இந்த புதிய சட்டங்கள் திறந்துவிட்டிருக்கிறது. விவசாயம் சார்ந்த படிப்புகளை படிக்கும் மாணவர்கள், இந்த சீர்திருத்தங்கள் தொடர்பாக விவசாயிகளிடம் விளக்க வேண்டும்.

கொரோனா- அலட்சியம் கூடாது
கொரோனா பாதிப்பு தொடங்கி ஓராண்டாகிவிட்டது. கொரோனா லாக்டவுனுக்குப் பின்னர் இப்போது கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதில் மும்முரமாக இருக்கிறோம். இந்த விஷயத்தில் நாம் அலட்சியமாக இருந்தால் கொரோனா மிக மிக ஆபத்தானதாக இருக்கும். ஆகையால் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications