இந்திரா காந்தியின் சாதனையை தொட்டு புதிய சரித்திரம் படைத்தார் பிரதமர் மோடி!
லோக்சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி நிகழ்த்திய சாதனையை தொட்டு பிரதமர் மோடி புதிய சரித்திரம் படைத்துள்ளார்.
டெல்லி:நடந்து முடிந்த லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. இதில், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. கடந்த 2014ம் ஆண்டு தேர்தலிலும் 282 இடங்களை பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
கடந்த தேர்தலைவிட இந்த தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் 295 இடங்கள் வரை பாஜகவு கிடைக்கும் வாய்ப்புள்ளது. இந்த நிலையில், தனிப்பெரும்பான்மை பெறுவதில் பிரதமர் மோடி புதிய சரித்திரம் படைத்துள்ளார்.

ஆம். 48 ஆண்டுகளுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டு முறைஆட்சி அமைக்கும் பெருமையை பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். 1967 மற்றும் 1971ம் ஆண்டு தேர்தல்களில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனிப்பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டு முறை ஆட்சி அமைத்தார். 1980ம் ஆண்டிலும் இந்திரா காந்தி தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தார்.
இந்த நிலையில், தொடர்ந்து இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் பெருமையை இந்திரா காந்திக்கு பின்னர் பிரதமர் மோடி பெற்றிருக்கிறார். மேலும், முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்திக்கு பின்னர் இந்த சாதனையை படைக்கும் மூன்றாவது பிரதமர் என்ற பெருமையையும் மோடி பெற்றிருக்கிறார்.
1951ம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் லோக்சபா தேர்தலில் முன்னாள் பிரதமர் நேரு மூன்றில் இரண்டு பங்கு தொகுதிகளை ( தேர்தல் நடந்த 489 இடங்களில் 364 தொகுதிகளில் வெற்றி) பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார்.
அதேபோன்று, 1957ம் ஆண்டு 371 தொகுதிகளிலும் மற்றும் 1962ம் ஆண்டு 361 தொகுதிகளையும் (மொத்தம் 494 தொகுதிகள்) கைப்பற்றி நேரு தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார்.
அவரது மறைவுக்கு பின்னர், அந்த சாதனையை அவரது மகள் இந்திரா காந்தி படைத்தார். இந்த நிலையில், 48 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த் சாதனையை பிரதமர் மோடி படைத்து இந்திய சரித்திரத்தில் தன்னை சக்திவாய்ந்த தலைவராக பதிவு செய்துள்ளார்.
இதனிடையே, கடந்த 1999ம் ஆண்டு அடல் பிகாரி வாஜ்பாயும், 2009ல் பிரதமர் மன்மோகன் சிங்கும் தொடர்ந்து ஆட்சியை பிடித்தனர். ஆனால், தனிப்பெரும்பான்மை இல்லாமல், கூட்டணி கட்சிகளின் துணையுடன் ஆட்சியை தக்க வைத்தது குறிப்பிடத்தக்கது.
-
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
தங்கம்.. இந்திய மக்களின் ஆசையை குழி தோண்டி புதைத்த வரி.. 2 வாரத்தில் தலைகீழாக மாறியது! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்











Click it and Unblock the Notifications