ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்.. வெள்ளி வென்ற மீராபாய் சானுவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!
டெல்லி: டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் வாங்கி கொடுத்துள்ள வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் வாழ்த்து கூறியுள்ளார்.
Recommended Video
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஒலிம்பிக் போட்டிகள் நேற்று தொடங்கியது. கடும் தொற்று காரணமாக ரசிகர்கள் இன்றி போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளின் வீரர்கள் பதக்க கனவுகளுடன் டோக்கியோவுக்கு சென்றுள்ளனர். நமது இந்திய வீரர்கள் பலரும் பதக்கம் பெற வேண்டும் என்ற வேட்கையுடன் டோக்கியாவில் களமிறங்கி உள்ளனர்.

இந்தியாவுக்கு முதல் பதக்கம்
ஒலிம்பிக் போட்டிகளின் முதல் நாளிலேயே இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுத்து பெருமை சேர்த்து இருக்கிறார் மீராபாய் சானு. பளு தூக்கும் போட்டியில் 49 கிலோ எடைப்பிரிவில் கலந்துகொண்ட மீராபாய் சானு, 202 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றி உள்ளார். மீராபாய் சானு 87 கிலோ, 84 கிலோ எடையை வெற்றிகரமாகத் தூக்கினார்.

மீராபாய் சானு அசத்தல்
ஆனால் 89 கிலோ எடையை தூக்க அவர் சிரமப்பட்டதால் தங்கத்தை நழுவ விட்டார். இது ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றம் அளித்தாலும் மீராபாய் சானு வாங்கி கொடுத்த வெள்ளிப்பதக்கம்தான் இந்தியாவுக்கு முதல் பதக்கமாகும். மேலும் பளு தூக்கும் பிரிவில்கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு இந்தியாவுக்கு பதக்கம் வாங்கி கொடுத்துள்ளார் மீராபாய் சானு

பதக்க வேட்டை தொடரும்
ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பதக்க வேட்டையை தொடங்கி வைத்த மீராபாய் சானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு, சினிமா பிரபலங்கள் மீராபாய் சானுக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இந்தியா மகிழ்ச்சி
பிரதமர் நரேந்திர மோடியும் வெள்ளி பதக்கம் வென்ற மீராபாய் சானுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ' பளுதூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக மீராபாய் சானுக்கு வாழ்த்துக்கள். இதனால் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. மிகவும் அற்புதமான செயல்திறன். மீராபாய் சானு வெற்றி ஒவ்வொரு இந்தியரையும் ஊக்குவிக்கிறது' என்று மோடி கூறியுள்ளார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications