நடைபாதை வியாபாரிகளுக்கு ரூ.10000 கடன் தரும் மத்திய அரசு... எளிதாக விண்ணப்பிக்க புதிய ஆப் அறிமுகம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நகர்புறங்களில் நடைபாதை வியாபாரிகள் ரூ.10 ஆயிரம் கடன் உதவி பெறுவதற்கு விண்ணப்பிக்க பிரத்யேக மொபைல் ஆப் (pm svanidhi app) ஒன்றை மத்திய அரசு தொடங்கி உள்ளது.

கொரோனா மற்றும் அதனால் போடப்பட்ட லாக்டவுன் ஆகியவற்றால் அன்றாடம் வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக நடை பாதை வியாபாரிகள், தள்ளுவண்டியில் வைத்து வியாபாரம் செய்யும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

PM SVANidhi scheme: Street Vendors Loan app Launched by Government

இவர்களுக்கு உதவும் வகையில், பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ் மத்திய அரசு ரூ.10000 கடன் உதவி வழங்குகிறது. இந்த கடன் தொகையை மாத தவணையாக ஓராண்டுக்குள் திரும்பி செலுத்தலாம். இந்த கடனுக்கு விண்ணப்பிக்க தனியாக மொபைல் ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.'

இந்த தகவலை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நகர்புறங்களில் உள்ள நடைபாதை வியாபாரிகளிடம் கடன் விண்ணப்பங்களை பெறும் வகையில் புதிய செயலியை (ஆப்) (pm svanidhi app )மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தொடங்கி வைத்தார்.

கடந்த ஜூலை 2ம் தேதி இந்த கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. இதுவரை 5.68லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளர். இதுவரை 1.3லட்சம் பேர் கடன் பெற்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+