திருவாரூர் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்படுமா? டி.ராஜா மனு மீது திங்களன்று விசாரணை
டெல்லி: திருவாரூர் இடைத் தேர்தலை ஒத்திவைக்க கோரும் மனுக்கள் மீது உச்ச நீதிமன்றம் வரும் திங்கட்கிழமை விசாரணை நடத்த உள்ளது.
திருவாரூர் சட்டசபைக்கு வரும் 28ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் பகுதியில் தற்போது இடைத்தேர்தல் தேவை இல்லை என்று கோரிக்கை விடுத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாரிமுத்து மற்றும் ரத்தினகுமார் ஆகிய 3 பேர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

புனரமைப்பு பணிகள் இன்னும் நடைபெற்றுக்கொண்டு உள்ளதால், மக்கள் கடும் கஷ்டத்தில் உள்ளனர். எனவே நிவாரணப் பணிகள் முடியும் வரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று இவர்கள் தங்கள் மனுவில் கோரிக்கை விடுத்தனர்.
இந்த மனுவை அவசரமாக விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் இந்த மனுவை அவர்கள் தாக்கல் செய்தனர். அப்போது, அடுத்த வாரத்தில் இந்த வழக்கு விசாரணையை நடத்துவோம் என்று ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.
இந்த நிலையில், 3 மனுக்கள் மீதும், திங்கட்கிழமை தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணை நடத்தப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
28ஆம் தேதி இந்த தேர்தல் நடைபெறுமா அல்லது ஒத்தி வைக்கப்படுமா என்பது திங்கள்கிழமை தெரிய வரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications