கோட்சே விவகாரம்: பாதுகாப்புக்கான நாடாளுமன்ற குழுவில் இருந்து சாத்வி பிரக்யா நீக்கப்படுகிறார்
Recommended Video
டெல்லி: தேசத்தந்தை மகாத்மா காந்தியை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என நாடாளுமன்றத்தில் புகழ்ந்ததால் பாஜக எம்.பி. சாத்வி பிரக்யாசிங் பாதுகாப்பு நாடாளுமன்ற நிலைக் குழுவில் இருந்து நீக்கப்படுவார் என அக்கட்சியின் செயல் தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
லோக்சபாவில் நேற்று திமுக எம்.பி. ஆ. ராசா, எஸ்பிஜி சட்ட திருத்தம் மீதான விவாதத்தின் போது மகாத்மா காந்தி கொலை வழக்கில் கொலையாளி நாதுராம் கோட்சே அளித்த வாக்குமூலத்தை சுட்டிக் காட்டி பேசினார். அப்போது குறுக்கிட்ட சாத்வி பிரக்யாசிங், கோட்சேவை தேசபக்தர் என்றார்.

இது மிகப் பெரும் சர்ச்சையானது. பொதுக் கூட்டங்களில் கோட்சேவை புகழ்வதை வழக்கமாக வைத்திருக்கும் பிரக்யாசிங், நாடாளுமன்றத்திலும் அதேபோல் பேசியது பெரும் சர்ச்சையானது. அவரது பேச்சு சபை குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பாஜக செயல் தலைவர் ஜே.பி. நட்டா, சாத்வி பிரக்யாசிங்கின் பேச்சு கண்டனத்துக்குரியது. அவரை பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவில் இருந்து நீக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது போன்ற கருத்துகளையோ தத்துவங்களையோ பாஜக ஒரு போதும் ஆதரிக்காது. மேலும் நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பாஜக குழு கூட்டங்களில் அவர் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
-
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications