Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பிரசாந்த் கிஷோர் பப்ளிசிட்டிக்காக பேசுவார்.. அதையெல்லாம் என்கிட்ட கேக்காதீங்க.. நிதிஷ் அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நிதிஷ் குமார் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகினாலும் பாஜகவுடன் தொடர்பில் இருக்கிறார் என்று பிரசாந்த் கிஷோர் கூறிய நிலையில், இதற்கு பதில் அளித்து நிதிஷ் குமார் பேசியுள்ளார்.

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் முதல்வராக பதவி வகித்து வந்த நிதிஷ் குமார் யாரும் எதிர்பாராத வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல்வர் பதவியில் இருந்து ராஜினமா செய்தார்.

உடனடியாக காங்கிரஸ், ஆர்.ஜே.டி உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

ஒரு ஆச்சர்யம் இருக்கிறது

ஒரு ஆச்சர்யம் இருக்கிறது

தற்போது பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக நிதிஷ் குமார் ஈடுபட்டுள்ளார். இதற்கு மத்தியில் பிகே என்று அழைக்கப்படும் பிரஷாந்த் கிஷோர் சமீப காலமாக நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் மீண்டும் நிதிஷ் குமாரை பிரஷந்த் கிஷோர் கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக பிரசாந்த் கிஷோர் கூறுகையில், ''பாஜகவுக்கு எதிராக தேசிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் நிதிஷ் குமார் தீவிரமாக ஈடுபட்டு இருப்பதாக நினைத்து இருப்பவர்களுக்கு ஒரு ஆச்சர்யம் இருக்கிறது.

பாஜகவுடன் நிதிஷ் குமார் தொடர்பு

பாஜகவுடன் நிதிஷ் குமார் தொடர்பு

பாஜகவுக்கான கதவுகளை அவர் இன்னும் திறந்தே வைத்துள்ளார். தனது கட்சி எம்.பியும் ராஜ்யசபா துணைத்தலைவருமான ஹரிவன்ஷ் ஜி மூலமாக பாஜகவுடன் நிதிஷ் குமார் தொடர்பு வைத்துள்ளார். அதன் காரணமாகவே ஹரிவன்ஷை ராஜினாமா செய்யுமாறு நிதிஷ் குமார் வலியுறுத்தவில்லை. பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய ஒரு சூழல் ஏற்பட்டால் உடனடியாக நிதிஷ் குமார் சென்று விடுவார் என்பதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்'' என்று பேசியிருந்தார்.

 நிதிஷ் குமார் பதில்

நிதிஷ் குமார் பதில்

தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதிஷ் குமார் வெளியே வந்தாலும் இன்னும் பாஜகவுடன் தொடர்பில் தான் இருக்கிறார் என்றும் மீண்டும் சேருவதற்காக தேவையேற்பட்டால் தயங்காமல் பாஜகவுடன் சென்று விடுவார் என்று கூறியது பீகார் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து நிதிஷ் குமார் கூறியதாவது:-

அவர் விரும்பியதை பேசலாம்

அவர் விரும்பியதை பேசலாம்

பிரஷாந்த் கிஷோரைப் பற்றி என்னிடம் கேட்காதீர்கள். அவர் பேசிக்கொண்டேதான் இருப்பார். விளம்பரத்திற்காக பிரஷாந்த் கிஷோர் இப்படி பேசுகிறார். அவர் விரும்பியதை பேசலாம். அதைப்பற்றி எங்களுக்கு எந்த கவலையும் இல்லை. ஒரு காலத்தில் அவரை நான் மதித்தேன். இப்போது பிரஷாந்த் கிஷோரின் மனதில் என்ன உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+