பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு தொடரும் சிக்கல்.. இன்று மீண்டும் சம்மன்
டெல்லி: ஷிகோபூர் நில ஒப்பந்தம் குறித்த ஊழல் முறைகேடு தொடர்பான வழக்கில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும், எம்பியுமான பிரியங்கா காந்தியின் கணவா் ராபா்ட் வதேராவிடம் நேற்று சுமாா் 6 மணி நேரம் அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்ட நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹரியானாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு ஷிகோபூர் நில ஒப்பந்தத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுப்பப்பட்டன. ராபா்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி தனியாா் நிறுவனம், மனேசா்-ஷிகோபூா் பகுதியில் 3.5 ஏக்கா் நிலத்தை டிஎல்எஃப் ரியல் எஸ்டேட் நிறுவனத்திடம் இருந்து ரூ.7.5 கோடிக்கு நிலத்தை வாங்கியுள்ளது. இந்த நிலத்தை வாங்கிய அடுத்த நாளே ஸ்கைலைட் நிறுவனத்தின் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளது. பொதுவாக இந்த நடைமுறைகள் எல்லாம் நிறைவடைய சுமார் 3 மாதங்கள் ஆகும். ஆனால், 24 மணி நேரத்தில் ஆவணப் பதிவுகள் நடந்து முடிந்துள்ளன.

அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு சரியாக ஒரு மாதம் கழித்து புதிய வீட்டு வசதி வாரிய திட்டத்தை அறிவித்தது. மேலும், அந்த நிலத்தின் பெரும்பகுதியில் வீட்டு வசதித் திட்டத்தை மேற்கொள்ள ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்துக்கு அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான மாநில அரசு அனுமதி அளித்தது. இதனால் அந்த நிலத்தின் மதிப்பு உடனடியாக உயா்ந்தது.
இதைத்தொடர்ந்து, 2008 இல் அதே நிலத்தை ரூ. 58 கோடிக்கு வாங்க டிஎல்எஃப் யுனிவா்சல் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. வதேரா ரூ.7.5 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த நிலத்தின் மதிப்பு, சில மாதங்களில் சுமாா் 700% உயா்ந்து ரூ. 58 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஊழல் முறைகேட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கருதி, பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என ராபா்ட் வதேராவுக்கு ஏப்ரல் 8 ஆம் தேதி அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதைத்தொடா்ந்து அவருக்கு மீண்டும் அனுப்பப்பட்ட சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை தலைமை அலுவலகத்தில் நேற்று ஆஜரானாா். தனது இல்லத்தில் இருந்து அலுவலகத்திற்கு நடந்தே சென்றார்.
ராபர்ட் வதேராவிடம் கிட்டத்தட்ட 6 மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட நிலையில், அவரை மீண்டும் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு ஆஜராகுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். ராபர்ட் வதேரா இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறியதோடு தன் மீதான ஊழல் புகார்களையும் நிராகரித்துள்ளார்.
-
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தி.. உலகையே உலுக்கும் 'கடல் கண்ணிவெடிகள்'.. கழுத்தை நெரிக்கும் ஈரான்.. டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications