பாஜகவின் வெறுப்பு பிரச்சாரம்.. அதிரடியை கையில் எடுத்த ராகுல்.. ஆன்லைனில் அழைப்பு விடுத்து.. செம

Subscribe to Oneindia Tamil

டெல்லி: வெறுப்பு பிரச்சாரங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியுடன் சோஷியல் மீடியாவில் சேருங்கள் என ராகுல் காந்தி இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ' இந்தியாவின் சிந்தனைகளை பாதுகாக்க வாருங்கள் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.

ஐந்து லட்சம் ஆன்லைன் "போர்வீரர்கள்" வேண்டும் என்ற நோக்கத்துடன் காங்கிரஸ் நேற்று சமூக ஊடகங்களில்' பிரச்சாரத்தைத் தொடங்கியது. இந்த நடவடிக்கை பாஜகவின் வலிமைமிக்க ஐடி கட்டமைப்பிற்கு பதிலடி கொடுக்க காங்கிரசால் எடுக்கப்பட்ட முயற்சியாக பார்க்கப்படுகிறது.

ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இளைஞர்களுக்கு விடுத்துள்ள வீடியோ மற்றும் ட்வீட் அழைப்பில் " இப்போது உண்மைக்காகவும், மனித நேயத்திற்காகவும், சமூக நல்லிணக்கத்திற்காகவும் போராட இந்தியாவுக்கு அகிம்சை வீரர்கள் தேவை. இந்தியாவின் சிந்தனைகளை பாதுகாப்பதில் நீங்கள் தான் மையமாக இருக்கிறீர்கள். வாருங்கள், இந்த சண்டையில் #JoinCongressSocialMedia நீங்கள் தேவை!" என்று ராகுல் வீடியோ செய்தியுடன் ட்வீட் செய்துள்ளார்.

அடக்குமுறைகளை காணலாம்

அடக்குமுறைகளை காணலாம்

தனது வீடியோ செய்தியில், ராகுல் காந்தி, "ஒரு இளைஞனாக நீங்கள் என்ன நடக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். உங்களிடமிருந்து எதுவும் மறைக்கப்படவில்லை, உங்கள் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில், நீங்கள் அடக்குமுறையைக் காணலாம், இந்தியாவின் சிந்தனை மீதான தாக்குதலை நீங்கள் காணலாம்.

வெறுப்பை பரப்புகிறார்கள்

வெறுப்பை பரப்புகிறார்கள்

டெல்லிக்கு வெளியே என்ன நடக்கிது என்பதை பாருங்கள், விவசாயிகளுக்கு என்ன நடக்கிறது என்பதை நீங்கள் பார்க்க முடியும். தேசத்திற்காக பாடுபடும் முதுகெலும்பு தான் விவசாயிகள். ஆனால் அவர்களுக்கு எதிராக வெறுப்பையும் கோபத்தையும் பரப்புகிறார்கள். எனவே இதில் மக்களை பாதுகாக்க எங்களுக்கு ஆன்லைன் போர்வீரர்கள் தேவை., மனிதநேயம், சமூக அமைதி, சமூக நல்லிணக்கம் மற்றும் அன்பு ஆகிய கருத்துக்களைப் பாதுகாக்க ஆன்லைன் வீரர்கள் தேவை.

சத்திய ராணுவம்

சத்திய ராணுவம்

வாருங்கள், இந்த இராணுவத்தில் சேருங்கள். இது வெறுப்பின் இராணுவம் அல்ல, இது வன்முறை இராணுவம் அல்ல, இது சத்திய இராணுவம், இது இந்தியாவின் யோசனையை பாதுகாக்கும் ஒரு இராணுவம். நாங்கள் உங்களுக்காக இந்த தளத்தை உருவாக்குகிறோம் இந்த போரில் சண்டையிட்டு அதை வெல்வதற்கான கருவிகளை வழங்குங்கள் " இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.

காங்கிரஸ் சமூக ஊடகம்

காங்கிரஸ் சமூக ஊடகம்

காங்கிரஸ் கட்சி வலைத்தளம், கட்டணமில்லா எண் அல்லது வாட்ஸ்அப் மூலம் மக்கள் பிரச்சாரத்தில் சேரலாம் என்று காங்கிரஸின் சமூக ஊடகத் துறையின் தலைவராக பொறுப்பேற்ற ரோஹன் குப்தா கூறினார். இந்தத் துறை முன்னதாக திவ்யா ஸ்பந்தனா தலைமையில் இது இயங்கி வந்தது.

தவறான கதைகளை

தவறான கதைகளை

ஒரு கேள்விக்கு பதிலளித்த ரோஹன் குப்தா, பிரச்சாரம் முற்றிலும் தன்னார்வ மையமாக இருக்கும், காங்கிரஸுடன் அல்லது அதன் சித்தாந்தத்துடன் இணைந்திருப்பவர்களை ஒன்றாக இணைக்க வேண்டும், இதனால் அவர்கள் ஒன்றாக குரல் எழுப்ப முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
இன்று ட்ரோல்கள் முக்கிய இடத்தில் உள்ளன. அவை சமூக ஊடகங்களில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன என்பதை நாங்கள் அறிவோம். அவற்றை எதிர்கொண்டு மக்களுக்கு உண்மையை காட்ட வேண்டும். தவறான கதைகளை இந்தியாவில் உருவாக்க நாங்கள் இனி அனுமதிக்க முடியாது. நிறைய போலி செய்திகள் உள்ளன, அது ஒரு பெரிய பிரச்சினை. நாங்கள் அதை மக்களின் பலத்துடன் எதிர்க்க வேண்டும். ஆகவே, ஐந்து லட்சம் பேர் ஒன்று சேர வேண்டும். அவர்கள் குரலை யாரும் புறக்கணிக்க முடியாது" இவ்வாறு கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+