ராகுலை விடுங்க.. சீனாவுக்குப் போய் நீங்க என்ன பேசினீங்க? மோடி மீது பாய்ந்த மல்லிகார்ஜூன கார்கே
பிரதமர் மோடியின் சீனா பேச்சை முன்வைத்து பதிலடி தந்துள்ளார் மல்லிகார்ஜூன கார்கே.
டெல்லி: இந்தியாவில் ஜனநாயகம் சீர்குலைக்கப்படுவதாக லண்டனில் ராகுல் காந்தி தெரிவித்த கருத்து நாடாளுமன்றத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என லோக்சபா, ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், பியூஷ் கோயல் வலியுறுத்தினர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இங்கிலாந்து சென்ற ராகுல் காந்தி, லண்டன் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் மாணவர்களிடையே உரையாற்றினார். அதேபோல் லண்டனில் உள்ள இந்திய பத்திரிகையாளர் சங்கத்திலும் உரையாற்றினார் ராகுல். அங்கு பேசிய ராகுல் காந்தி, இந்தியாவில் அரசுக்கு எதிரான குரல்கள் ஒடுக்கப்படுகின்றன. இந்தியாவின் ஜனநாயக கட்டமைப்புகள் தாக்குதலுக்குள்ளாகின்றன. இதற்கு எதிராக குரல் கொடுக்கத்தான் ஒற்றுமை யாத்திரை நடத்தப்பட்டது என்றார்.

மேலும் இந்தியாவின் நாடாளுமன்றம், நீதித்துறை உள்ளிட்ட அனைத்துமே தாக்கப்படுகின்றன; ஒடுக்கப்படுகின்றன. இதனால் மக்களின் குரலை வெளிப்படுத்துவதில் நெருக்கடி உருவாகி இருக்கிறது என்றார் ராகுல் காந்தி.
ராகுல் காந்தியின் இந்த விமர்சனத்தை பிரதமர் மொடி மற்றும் மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் லோக்சபாவில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்தார். ராஜ்யசபாவில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினார். இதனை காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சி கட்சி எம்.பிக்கள் கடுமையாக எதிர்த்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதில் அளித்துள்ளார். பிரதமர் மோடி முன்னர் சீனா சென்ற போது நமது நாட்டை பற்றி பேசியதை சுட்டிக்காட்டி மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். அதாவது. சீனாவில் நீங்கள் கூறிய கருத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். முன்பு, நீங்கள் இந்தியராக பிறந்ததற்காக வெட்கப்பட்டீர்கள். இப்போது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் பெருமை கொள்கிறீர்கள். இது இந்தியாவையும் இந்தியர்களையும் அவமானப்படுத்தவில்லையா?உங்கள் அமைச்சர்களுக்கு அவர்களின் நினைவுகளைப் புதுப்பிக்கச் சொல்லுங்கள். "கடந்த ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ அதைத்தான் இந்தியாவில் பிறவி எடுத்திருக்கிறோம் என்று மக்கள் உணர்ந்த காலம் ஒன்று இருந்தது" என்று தென் கொரியாவில், நீங்கள் சொன்னீர்கள். காங்கிரஸ் கட்சிக்கு அறிவுரை சொல்வதற்கு முன் முதலில் 'உண்மையின் கண்ணாடி'யைப் பாருங்கள்! என கொந்தளித்துள்ளார் கார்கே.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications