புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் என்ன?.. உரையாடலை வீடியோவாக வெளியிட்ட ராகுல்
டெல்லி: டெல்லியில் 20-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்களுடன் தான் நடத்திய உரையாடல் குறித்தும் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புகள் குறித்தும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொகுத்து வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
ஹரியானாவிலிருந்து உத்தரப்பிரதேசம் மாநிலம் ஜான்சிக்கு டெல்லி வழியாக 20-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அண்மையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். சுக்தேவ் விகார அருகே அவர்களை கண்ட ராகுல் காந்தி தனது காரை நிறுத்தி அவர்களிடம் உரையாற்றினார்.
மேலும் அவர்கள் சொந்த ஊர் திரும்ப கார்கள் மற்றும் மினி பேருந்துகளை ஏற்பாடு செய்தார். இந்த நிலையில் தொழிலாளர்களுடன் ராகுல் காந்தி நடத்திய உரை குறித்தும் அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் அவர்களது எதிர்பார்ப்புகள் குறித்தும் வீடியோ வெளியிட்டுள்ளார்.

சகோதரிகள்
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டுகளில் இந்தியாவின் அங்கீகரிக்கப்படாத ஹீரோக்களான புலம்பெயர்ந்த சகோதர, சகோதரிகளுடன் உரையாற்றினேன். கடந்த சில வாரங்களாக சொல்லொண்ணா துயரத்தையும் வன்முறையையும் அநீதியையும் சந்தித்து வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

சொந்த ஊர்
இதை அடுத்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கொரோனா வைரஸ் ஊரடங்கால் புலம்பெயர்ந்த சகோதர, சகோதரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். உணவே இல்லாமல் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் நடந்தே செல்கிறார்கள். அவ்வாறு செல்லும் வழியில் அவர்கள் நிறுத்தப்படுகிறார்கள், அச்சுறுத்தப்படுகிறார்கள். எனினும் அவர்கள் தங்கள் சொந்த ஊர்களை நோக்கி நடந்தே செல்கிறார்கள்.

ஜான்சி
அவர்களிடம் நான் நடத்திய உரையாடல் மூலம் அவர்கள் நினைப்பது என்ன, என்ன எதிர்பார்க்கிறார்கள், எப்படி அச்சமடைந்துள்ளார்கள் என்பது குறித்து இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளேன் என்றார். அந்த வீடியோவில் ஜான்சியை சேர்ந்த மகேஷ்குமார் கூறுகையில் நாங்கள் 150 கி.மீ, தூரம் ஏற்கெனவே நடந்துவிட்டோம். இன்னும் நடந்து கொண்டு தான் இருக்கிறோம் என்றார்.

மார்ச் மாதம்
இன்னொரு புலம்பெயர்ந்த பெண் கூறுகையில் இந்த ஊரடங்கால் வசதி படைத்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. உண்மையிலேயே எங்களை போன்ற ஏழை மக்கள்தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த 3 தினங்களாக நாங்களும் எங்கள் குழந்தைகளும் பட்டினி கிடக்கிறோம் என்றார். லாக்டவுன் குறித்து எப்போது தெரியும் என ராகுல் அவர்களிடம் கேட்டபோது, மார்ச் 22-ஆம் தேதி ஊரடங்கு என்பது மார்ச் 21 ஆம் தேதிதான் எங்களுக்கு தெரிந்தது.

2500 வாடகை
எனினும் உடனடியாக இந்த லாக்டவுன் அமலுக்கு வந்துவிட்டது. எங்களுக்கு குறைந்தபட்சம் 4 நாட்களாவது கால அவகாசம் வழங்கியிருக்கலாம். இரு மாதங்கள் காத்திருந்த நிலையில் நடந்தே சொந்த ஊர் செல்வோம் என முடிவு செய்தோம். லாக்டவுன் நீடித்துக் கொண்டே செல்வதால் நாங்கள் இங்கு இருந்து என்ன செய்வது? 3ஆவது கட்ட லாக்டவுனுக்கு பிறகு என்ன செய்வது என எங்களுக்கு தெரியவில்லை. மாதம் ரூ 2500 வாடகை. எங்களிடம் ஒரு பைசா கூட இல்லை.
வாகன ஏற்பாடு
வழியில் யாராவது ஏதேனும் கொடுத்தால் வாங்கி உண்கிறோம். எங்கள் உயிரை காத்துக் வேண்டுமே என்ன செய்வது. கொரோனா வைரஸை விட பசியே எங்களுக்கு வேதனையை தருகிறது. நாங்கள் அரசிடம் கேட்டுக் கொள்வதெல்லாம் எங்களை சொந்த ஊரில் கொண்டு சேர்த்து வேலை வழங்குவதுதான் என்றனர். இறுதியாக அவர்களது வேண்டுகோளின்படி ஜான்சிக்கு செல்ல கார், மினி பேருந்தை ராகுல் ஏற்பாடு செய்தார்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications