இப்படியும் ஒரு முயற்சி- ரயில் பெட்டிகளையே கொரோனா வார்டுகளாக மாற்ற மத்திய அரசு ஆலோசனை
டெல்லி: நாடு முழுவதும் ரயில் சேவைகள் முடக்கப்பட்ட நிலையில் ரயில் பெட்டிகளையே கொரோனா வார்டுகளாக மாற்றுவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.
Recommended Video
கொரோனா கொடுதொற்றுநோயின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று 2-வது நாளாக லாக்டவுன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

ஒட்டுமொத்தமாக இந்தியா முழுவதும் பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ந் தேதி வரை ரயில்சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ரயில்வே துறையை கொரோனா தடுப்பு பணிகளுக்கு எப்படிப் பயன்படுத்துவது என்பது தொடர்பாக மத்திய அரசின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே பொதுமேலாளர்கள் அனைவரும் பங்கேற்றனர். அப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்காக தனிமைப்படுத்துதல் வார்டாகவும் அவசரகால சிகிச்சைக்கான மையங்களாகவும் ரயில் பெட்டிகளை பயன்படுத்துதல் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
அதேபோல் கொரோனா சிகிச்சைக்கான கருவிகளை உற்பத்தி செய்வது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications