மத்திய அரசுடன் மோதல்.. ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலக முடிவு?! அதிர்ச்சி
மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.
Recommended Video

டெல்லி: மத்திய அரசுடன் ஏற்பட்ட மோதலை அடுத்து ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.
தற்போது மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையே கடுமையான மோதல் நிலவி வருகிறது. தொடர்ந்து பொருளாதார நிலை மோசமடைந்து வருவதால் மிகப்பெரிய பிரச்சனைகள் உருவெடுக்க தொடங்கி இருக்கிறது.
ரிசர்வ் வங்கியை, மத்திய அரசு சுதந்திரமாக செயல்பட விடவில்லை என்று பெரிய குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இன்று ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது.
[10 நாட்களுக்குள் ரஃபேல் விமான விலை விவரம் தேவை.. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு ]

என்ன காரணம்
நேற்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி ரிசர்வ் வங்கிக்கு எதிராக கடுமையான கண்டனங்களை வைத்தார். 2008-2014 ரிசர்வ் வங்கி கடன்களை வாரி வழங்கி இருக்கிறது. இது பெரிய பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போது ஏற்பட்டு இருக்கும் பொருளாதார சீர்குலைவிற்கு அதுதான் காரணம் என்று அருண் ஜேட்லி குற்றச்சாட்டு வைத்தார்.

கடும் குற்றச்சாட்டு
மேலும் ரிசர்வ் வங்கி மத்திய அரசுடன் ஒத்துழைப்பு வழங்குவதில்லை. இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து சரிய காரணம் ரிசர்வ் வங்கிதான். அதன் மோசமான பொருளாதார கொள்கைதான் டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிய காரணம் என்று மொத்தமாக ஆர்பிஐ மீது அருண் ஜேட்லி பழியை தூக்கிப்போட்டார்.

பதில் அளித்தார்
இந்த நிலையில் அவரின் கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஆர்பிஐ துணை கவர்னர் விரல் ஆச்சார்யா, ஆர்பிஐயின் அதிகாரத்தை பாஜக அரசு மட்டுப்படுத்த முயல்கிறது. ஆர்பிஐ அமைப்பின் சுதந்திரத்தில் தலையிட முயல்கிறது. இது பெரிய பொருளாதார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும். இப்போது உள்ள பொருளாதார சீர்கேட்டிற்கு மத்திய அரசுதான் காரணம் என்று கூறியுள்ளார்.

விலகலா?
இந்த நிலையில் மத்திய அரசுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் இடையில் உள்ள பிரச்சனை உச்சமும் அடைந்து இருக்கிறது. இது மீண்டும் சரி செய்ய முடியாத நிலையை அடைந்துள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு வைத்துள்ளார். இந்த நிலையில்தான் ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் பட்டேல் இன்று பதவி விலகுவார் என்று கூறப்படுகிறது. இன்று மாலைக்குள் இதுகுறித்து அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications