அட சாமி! அக்னி நட்சத்திரத்துக்கு முன்பே இப்படியா.. வாட்டி வதக்கிய ஏப்ரல்! 120 ஆண்டுகளில் உச்சம்
டெல்லி: சுமார் 120 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் பல பகுதிகளில் மிகக் கடுமையான வெப்பம் பதிவாகி உள்ளது.
அக்னி நட்சத்திரம் இந்த ஆண்டு வரும் மே மாதம் 4ஆம் தேதி தான் ஆரம்பிக்கிறது. ஆனால், அதற்கு முன்னதாகவே, நாட்டில் பல பகுதிகளில் இந்த ஆண்டு கடும் வெயில் காணப்படுகிறது.
சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தால் பொதுமக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். பகல் நேரங்களில், சில அடிகள் கூட வெளியே போக முடியாத அளவுக்கு வெயில் மண்டையைப் பிளக்கிறது.

வட இந்தியா
குறிப்பாகத் தென்னிந்தியா உடன் ஒப்பிடுகையில் வட இந்தியாவில் வெயிலின் தாக்கம் மிக மோசமாக உள்ளது. மே மாதம் தான் இந்தியாவில் எப்போது வெப்பம் உச்சத்தில் இருக்கும் என்றும் வட இந்தியாவில் சில பகுதிகளில் இந்த ஆண்டு வெப்பநிலை 50 டிகிரியைத் தாண்டும் வாய்ப்புகள் மிக அதிகம் என்றும் இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறி உள்ளது. ஏனென்றால், வட இந்தியாவில் பல பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஏப்ரல் மாதம் வெயிலின் தாக்கம் மிக மோசமாக இருந்துள்ளது.

122 ஆண்டுகளில் முதல்முறை
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநர் டாக்டர் எம் மொஹபத்ரா கூறுகையில், "வடமேற்கு மற்றும் மத்திய இந்தியப் பகுதிகளில் ஏப்ரல் மாதம் சராசரி அதிகபட்ச வெப்பநிலை முறையே 35.90 டிகிரி செல்சியஸ் மற்றும் 37.78 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது. ஏப்ரல் மாதத்தில் இந்தியா முழுவதும் சராசரி வெப்பநிலை 35.05 டிகிரியாக இருந்தது, இது 122 ஆண்டுகளில் நான்காவது அதிகபட்சமாகும். வரும் மே மாதமும் கூட இதே நிலை தான் தொடரும்.

வெப்பம் அதிகம்
குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய பகுதிகளில் மே மாதத்திலும் இயல்பை விட அதிகமான வெப்பநிலையே இருக்கும். தென் இந்தியாவின் சில பகுதிகளைத் தவிர, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதம் இரவு நாட்களில் வெப்பத்தின் அளவு அதிகமாகவே இருக்கும். நாட்டில் மே 2022இல் சராசரி மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாகவே இருக்கும். அதேநேரம் வடமேற்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவின் சில பகுதிகள் மற்றும் தென்கிழக்கு தீபகற்பம் பகுதியில் மே மாதத்தில் இயல்பை விடக் குறைவாக மழை பெய்யும்.

என்ன காரணம்
வெப்பம் காரணமாக இந்தியாவில் மின் நுகர்வு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மழையின் அளவு தொடர்ந்து குறைந்து வருவதே மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெப்ப நிலை இயல்பை விட அதிகமாக இருக்கக் காரணம். மார்ச் மாதத்தில், வடமேற்கு இந்தியாவில் சுமார் 89 சதவீத வரை மழை குறைந்துள்ளது. அதேபோல ஏப்ரல் மாதம் மழையின் அளவு வழக்கத்தை விட 83 சதவீதம் குறைந்துள்ளது
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications