பதவி உயர்வில் எஸ்.சி., எஸ்.டி இடஒதுக்கீடுக்கு விதிகளை தளர்த்த உச்சநீதிமன்றம் மறுப்பு
டெல்லி: பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. இடஒதுக்கீடு பிரிவினருக்கு விதிகளைத் தளர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மத்திய அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை; ஆகையால் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கான நிபந்தனைகளை தளர்த்த வேண்டும் என்று ஜர்னைல்சிங் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

மத்திய அரசு விளக்கம்
இந்த வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. மத்திய அரசு சார்பில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜராகினார். மத்திய அரசு தமது பிரமாணப் பத்திரத்தில், தகுதி அற்றவர்கள் யாருக்கும் பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பதவி உயர்வு வழங்குவதற்கு என அமைக்கப்பட்ட குழு பல்வேறு அம்சங்களை பரிசீலனை செய்தே முடிவுகளை எடுக்கிறது என தெரிவித்திருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட தீர்ப்பு
இவ்வழக்கை நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இவ்வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் கடந்த ஆண்டு அக்டோபர் 26-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு
இவ்வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர். கவாய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று அளித்த தீர்ப்பில், பதவி உயர்வில் எஸ்.சி, எஸ்.டி, பிரிவினருக்கான இடஒதுக்கீடு பிரதிநிதித்துவ அளவை உச்சநீதிமன்றம் நிர்ணயம் செய்ய இயலாது. எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் போதுமானதா? இல்லையா? என்கிற தரவுகளை மாநில அரசுகள்தான் சேகரிக்கவும் முடியும் என கூறியுள்ளது.

மனு தள்ளுபடி
மேலும் இந்த விவகாரம் மத்திய- மாநில அரசுகளினுடைய கொள்கை முடிவு. இதில் உச்சநீதிமன்றம் எந்த விதமான உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. ஆகையால் மத்திய அரசுப் பணிகளில் பதவி உயர்வுகளில் எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கான இடஒதுக்கீட்டுக்கான நிபந்தனைகளை தளர்த்தக் கோரும் ஜர்னைல்சிங்கின் மனுவை தள்ளுபடி செய்கிறோம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications