டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அயோத்தி வழக்கு: கொலை மிரட்டல் விடுத்த சென்னை நபருக்கு எதிரான அவதூறு மனு மீது நாளை விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வரும் மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவானுக்கு சென்னை நபர் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான மனு மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கின் இறுதி கட்ட விசாரணைகள் உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முன்னிலையில் நடைபெற்று வருகிறது. கடந்த 17 நாட்களாக தினமும் இந்த விசாரணை நடைபெறுகிறது.

SC to hear contempt petition against Chennai man tomorrow

இவ்வழக்கில் சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பாக மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான் ஆஜராகி வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையை சேர்ந்த ஒருநபர் கொலை மிரட்டல் விடுத்து ராஜீவ் தவானுக்கு கடிதங்கள் மட்டும் வாட்ஸ் ஆப் மெசேஜ்களை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராஜீவ் தவான் சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்சிடம் முறையிட்டார். சென்னை நபருக்கு எதிராக அவதூறு மனுவையும் கபில் சிபல் தாக்கல் செய்தார்.

இதனை ஏற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பெஞ்சி இந்த மனு மீது நாளை விசாரணை நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

English summary
The Supreme court will hear the Contempt petition against chennai man was filed by senior advocate Rajeev Dhavan on Tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X