நுபுர் சர்மாவுக்கு எதிரான அனைத்து வழக்குகள் டெல்லி போலீசுக்கு மாற்றம்-உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!
டெல்லி: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக பேசியதால் பாஜகவின் முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
நபிகள் நாயகம் தொடர்பாக டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக பேசினார் நுபுர் சர்மா. அவரது இந்த கருத்து சர்வதேச பிரச்சனையாக உருவெடுத்தது. பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மாவின் இந்த கருத்துக்கு மத்திய அரசுதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பல நாடுகள் வலியுறுத்தின.

இதனையடுத்தே பாஜகவில் இருந்து நுபுர் சர்மா சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதேநேரத்தில் நுபுர் சர்மா கருத்தை முன்வைத்து கான்பூர் உள்ளிட்ட இடங்களில் வன்முறைகள் வெடித்தன. நுபுர் சர்மாவை கைது செய்ய வலியுறுத்தி நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன. ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் ஒருவர் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தம் மீது நாட்டின் பல மாநிலங்களில் தொடரப்பட்ட வழக்கை டெல்லிக்கு மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் நுபுர் சர்மா ஒரு மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், நுபுர் சர்மா டிவியில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; நாடு முழுவதும் நடைபெறும் வன்முறைகளுக்கு நுபுர் சர்மாவே பொறுப்பு என கடுமையாக சாடியது. இதனை எதிர்த்தும் மனுத் தாக்கல் செய்திருந்தார் நுபுர் சர்மா.
மேலும் நுபுர் சர்மாவை கைது செய்வதற்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடையும் விதித்திருந்தது. இந்த நிலையில் நுபுர் சர்மாவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லி போலீசுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. இதனால் நுபுர் சர்மா தரப்பு சற்று நிம்மதி அடைந்துள்ளது.
டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்றவர் நுபுர் சர்மா. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி சார்பில் போட்டியிட்டு 2008ல் பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவரானார். 2008-ல் டெல்லி பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் கிலானி பங்கேற்ற போது அவருடன் கை கலப்பில் ஈடுபட்டவர் நுபுர் சர்மா. இதையடுத்து பாஜகவில் முக்கியத்துவம் பெற்றார் நுபுர் சர்மா. 2015-ல் டெல்லி சட்டசபை தேர்தலில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார்.பின்னர் டெல்லி பாஜகவின் முகமாக இருந்தார் நுபுர் சர்மா.
-
ஹலால் செய்யப்பட்ட உணவா இது? ராம ஸ்ரீனிவாசனின் சர்ச்சை வீடியோ.. கையில் எடுத்த திமுக.. தயங்கும் அதிமுக -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications