மதஉணர்வை தூண்டியதாக வழக்கு.. ஜாமின் கோரிய முகமது ஜுபைரின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
டெல்லி: மத உணர்வை தூண்டியதாக ஆல்ட் நியூஸ் முகமது ஜுபைர் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜாமின் கோரிய அவரது மனுவின் விசாரணையை செசன்ஸ் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
‛ஆல்ட் நியூஸ்' எனும் ‛பேக்ட் செக்' இணையதளத்தின் இணை நிறுவனர் முகமது ஜுபைர். இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வருகிறார்.
மேலும் வலதுசாரிகள் பரப்பும் செய்திகளின் உண்மை தன்மையை கண்டறிந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தார்.

முகமது ஜுபைர் கைது
இந்நிலையில் மத உணர்வை தூண்டியதாக கடந்த ஜூன் 27 ம் தேதி முகமது ஜுபைரை டெல்லி போலீசார் கைது செய்தனர். 2018 ல் டுவிட்டர் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இந்து மத உணர்வை புண்படுத்தியாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இதையடுத்து அவரை போலீசார் கஸ்டடியில் எடுத்து விசாரித்தனர். அதன்பிறகு நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஜாமின் கோரி மனு
இந்த வழக்கில் அவர் ஜாமின் கோரி டெல்லியில் உள்ள தலைமை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு மீது ஜூன் 2ல் விசாரணை நடத்திய நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்க மறுத்தது. இதனை எதிர்த்து முகமது ஜுபைர் சார்பில் டெல்லி செசன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார்.

ஒத்திவைப்பு
இந்த மனு மீது இன்று விசாரணை நடத்தப்பட்டது. முகமது ஜுபைர் சார்பில் விருந்தா குரோவர் வாதாடினார். டெல்லி போலீஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன்வைக்க காலஅவகாசம் கோரினார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் வழக்கு விசாரணையை ஜூலை 14ம் தேதி மதியம் 12.30 மணிக்கு ஒத்திவைத்தது.

தொடர்ந்து சிறையில் இருக்கும் சூழல்
முன்னதாக முகமது ஜுபைர் பதிவு தொடர்பாக ஜூலை மாதம் ஒன்றாம் தேதி முகமது ஜுபைர் மீது உத்தர பிரதேச மாநிலம் சீதாபூர் போலீசார் மற்றொரு வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு இடைக்கால ஜாமின் கிடைத்து உள்ளது. இதனால் டெல்லி போலீசாரின் வழக்கிலும் ஜாமின் கிடைத்தால் சிறையில் இருந்து அவர் வெளியே வர முடியும். ஆனால் விசாரணை ஒத்திவைக்கப்பட்டதால் அவர் தொடர்ந்து சிறையில் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை
இதற்கிடையே உத்தர பிரதேச மாநிலத்தில் தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை அலகாபாத் உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்தது. இதனை எதிர்த்து முகமது ஜுபைர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த மேல்முறையீட்டு வழக்கு விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. நீதிபதிகள் டிஒய் சந்திரசூட் மற்றும் ஏஎஸ் போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications