கலைநயமிக்க நடிப்பு.. மோடிக்கு மட்டும் கண்ணீர் வராதா என்ன? - சசி தரூர் கிண்டல்
டெல்லி: குலாம் நபி ஆசாத் குறித்து பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு பேசியது கலைத்திறன் மிக்க நடிப்பு என்று சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும் அமளிக்கு இடையே பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், கடந்த 9ம் தேதியன்று பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி பேசினார். அப்போது, வரும் 15ம் தேதியோடு நிறைவைடையும் காங்கிரஸ் மூத்த தலைவர் குலாப் நபி ஆசாத்தின் பதவிக்காலம் குறித்து பேசும் போது பிரதமர் சற்று உணர்ச்சி வசப்பட்டார்.

மறக்கவே முடியாது
"காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலின் போது அங்கு ஏராளமான குஜராத் மக்கள் சிக்கிக் கொண்டனர். அப்போது அவர்களை மீட்கும் முயற்சியில் பெரும்பங்காற்றிய ஆசாத்தை என்னால் மறக்கவே முடியாது. அன்று இரவு ஆசாத் என்னிடம் தொலைபேசியில் பேசியது இன்றும் நினைவில் இருக்கிறது" என்று கூறிய போது, உணர்ச்சி மிகுதியில் பிரதமர் கண்களில் கண்ணீர் வந்தது.

சரியாக பயன்படுத்த வேண்டும்
மீண்டும் பேசிய பிரதமர், நாட்டு மக்கள் அனைவரையும் தனது குடும்ப உறுப்பினர்களைப் போன்று பாவித்தவர். அதிகாரம் வரும் போகும். அதனை நாம் சரியாக பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்று கூறிய போது மீண்டும் உணர்ச்சிவயப்பட்டார்.

சசி தரூர் கிண்டல்
இந்நிலையில், முன்னாள் துணைக்குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரியின் "By Many a Happy Accident: Recollections of a Life", என்ற நூலின் விவாதக் கூட்டத்தில் பேசிய சசி தரூர், பிரதமர் மோடியின் பேச்சை 'கலைத்திறனுடன் கூடிய பெர்ஃபாமன்ஸ்' என்று மேற்கோளிட்டு, பிரதமரின் சிறப்பான நடிப்பு என்பதாக சூசகமாக சாடியுள்ளார்.

தன்னாலும் அழ முடியும்
மேலும், காஸிப்பூர் எல்லையில் போராடும் விவசாயிகள் மத்தியில் உரையாற்றிய விவசாய சங்கத் தலைவர் ராகேஷ் திகைத் விட்ட கண்ணீருக்கு பதில் கொடுக்கும் விதமாக, தன்னாலும் கண்ணீர் விட முடியும் என்பதை மோடி காட்டியுள்ளார்" என்று சசி தரூர் கிண்டல் செய்துள்ளார்.












Click it and Unblock the Notifications