இலங்கையை விட்டு திடீரென வெளியேறிய கோத்தபாய ராஜபக்சே! நேபாளத்தில் மனைவியுடன் முகாம்!
டெல்லி: இலங்கையில் புதிய ஜனாதிபதியாக அனுர குமார திசநாயக்க நேற்று பதவியேற்ற நிலையில் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே திடீரென நேபாளம் சென்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோத்தபாய ராஜபக்சே மனைவியுடன் தற்போது நேபாளத்தில் முகாமிட்டுள்ளார். இலங்கைக்கு எப்போது கோத்தபாய ராஜபக்சே திரும்புவார் என்பது தெரியவில்லை என்கின்றன கொழும்பு தகவல்கள்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயக்க நேற்று பதவியேற்றார். இலங்கையில் ஜனாதிபதியாக, பிரதமராக கோலோச்சி பல லட்சம் ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்த ராஜபக்சேக்களின் வாரிசான நாமல் ராஜபக்சேவுக்கு ஜனாதிபதி தேர்தலில் பெரும் தோல்விதான் கிடைத்தது. ராஜபக்சேக்களின் கோட்டையான அம்பந்தோட்டையிலும் கூட அனுர குமார திசநாயக்கதான் அதிக வாக்குகளைப் பெற்றார்.

இலங்கையில் தங்களது செல்வாக்கு முடிவுக்கு வந்ததை உணர்ந்து கொண்ட ராஜபக்சேக்கள் குடும்பத்தைச் சேர்ந்த பலரும் ஏற்கனவே இலங்கையை விட்டு தப்பி வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டனர். ராஜபக்சேக்களின் கூட்டாளிகளாக செயல்பட்டு அட்டூழியங்களை அரங்கேற்றியவர்களும் துபாய், இந்தியா என பல நாடுகளுக்கு தப்பிவிட்டனர்.
இலங்கையில் இத்தகைய பரபரப்புகளுக்கு இடையே முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே திடீரென நேபாள நாட்டுக்கு மனைவியுடன் சென்றார். நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் தற்போது முகாமிட்டுள்ள கோத்தபாய ராஜபக்சே, பல்வேறு புத்த வழிபாட்டு தலங்களுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் எப்போது கோத்தபாய ராஜபக்சே இலங்கைக்கு திரும்புவார் என்பதும் தெரிவிக்கப்படவில்லை.
நேபாளத்தைச் சேர்ந்த சவுத்ரி குழுமம், இலங்கையில் பெருமளவு வங்கி உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்துள்ளது. இந்த குழுமத்தின் அழைப்பின் பேரிலேயே கோத்தபாய ராஜபக்சே, நேபாளம் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இலங்கையில் கோத்தபாய ஜனாதிபதியாக இருந்த போது அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் அப்போது மனைவியுடன் முதலில் மாலத்தீவுக்கு தப்பி ஓடினார் கோத்தபாய. பின்னர் ஒவ்வொரு நாடாக தஞ்சம் கேட்டு அலைந்து எந்த நாடும் அடைக்கலம் தர மறுத்ததால் வேறுவழியே இல்லாமல் இலங்கைக்கு திரும்பி அரசியல் துறவறம் மேற்கொண்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications