ஸ்டீராய்டுகள் ஆக்ஜிஸன் அளவை குறைக்கும் காரணி.. எச்சரிக்கும் எய்ம்ஸ் தலைவர்!
டெல்லி: லேசான கொரோனா இருப்பவர்களுக்குக் கூட ஸ்டீராய்டு மருந்துகளை பரிந்துரைப்பதால் ஆக்ஸிஜனின் அளவு குறையும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதை எதிர்கொள்ள இந்தியாவே போராடி வருகிறது. தற்போது கொரோனாவின் இரண்டாவது அலையால் பெரும்பாலான நோயாளிகள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழக்க நேரிடுகிறார்கள்.
இது போல் கொரோனாவின் தாக்கம் , தீவிரத்தை பொருத்த மூச்சுத்திணறல் ஏற்படுவதாக மருத்துவர்கள் சொல்கிற போதிலும் ஆக்ஸிஜன் அளவு ஏன் குறைகிறது என்பது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவர் ரன்தீப் குலேரியா தெரிவித்தார்.

கொரோனா அறிகுறிகள்
இதுகுறித்து அவர் கூறுகையில் கொரோனா அறிகுறிகள் லேசாக இருக்கும் போதே சிலர் சிடி ஸ்கேன் பரிசோதனை, ரத்த பரிசோதனைகள் எடுக்கிறார்கள். இதுபோல் லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு வீரியம் குறைந்த மருந்துகளை உட்கொண்டாலே போதுமானது. மேலும் மாஸ்க் அணிதல் , சமூக இடைவெளியுடன் இருத்தல் ஆகியவையே போதுமானது. ஆனால் சில மருத்துவர்கள் இவர்களுக்கு ஸ்டீராய்டு மருந்துகளை பரிந்துரைக்கிறார்கள். இது வைரஸின் அளவை பல மடங்கு பெருக்குகிறது. இதனால் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.

ஸ்டீராய்டு
கொரோனா வந்த முதல் 5 நாட்களுக்கு ஸ்டீராய்டு கொடுப்பதால் எந்த பயனும் இல்லை. லேசான அறிகுறி உடையவர்கள் திடீரென மோசமான நிலைக்கு செல்வதையும் தீவிர நிமோனியா காய்ச்சல் ஏற்படுவதையும் பார்க்கிறோம். இதெல்லாம் ஸ்டீராய்டுதான் காரணம்.

என்ன சிகிச்சை
கொரோனா நோயின் தாக்கம் நடுத்தர அளவில் உள்ள போது 3 சிறப்பான சிகிச்சைகளே முக்கியமானது. முதலில் ஆக்ஸிஜன் தெரபி, இரண்டாவது உடல்நல குறைவு மிதமாக இருக்கும் போதிலும் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருந்தால் அங்கு ஸ்டீராய்டுகளுக்கு வேலை இருக்கிறது. மூன்றாவது ஆன்டிகொயாகுலன்ட்கள்.

கோவிட் நிமோனியா
அதாவது கோவிட் 19 நிமோனியா என்பது வைரல் நிமோனியாவிலிருந்து வேறுபடுகிறது. கோவிட் நிமோனியாவானது ரத்தத்தை கெட்டியாக்குகிறது. இவ்வாறு நுரையீரலுக்கு செல்லும் ரத்தம் உறைந்துவிட்டால் ரத்த ஓட்டம் குறையும் என்றார் குலேரியா.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications