Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பயங்கரவாத நிதி.. “ஹவாலாவை” தடுக்கனும்! அந்த அமைப்பை தடை செய்தோம் - PFI தடை பற்றி அமித்ஷா பேச்சு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஹவாலா போன்ற அனைத்து வகையான பயங்கரவாத நிதி திரட்டலையும் தடுக்க வேண்டும் எனவும், அண்மையில் பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்த்த அமைப்புக்கு தடை விதித்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.

"பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை" என்ற பெயரில் நடைபெற்ற மாநாட்டில், பயங்கரவாதத்திற்கு எதிரான நிதி தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

இதில், "நாட்டின் ஜனநாயகம், மனித உரிமை, பொருளாதார முன்னேற்றம், உலக அமைதிக்கு பயங்கரவாதம் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

 தடை செய்யப்பட்ட அமைப்பு

தடை செய்யப்பட்ட அமைப்பு

அதை நாம் வெற்றிபெற விடக்கூடாது. சமூக சேவைகள் என்ற பெயரில் இளைஞர்களை பயங்கரவாதிகளாக மாற்றவும், பயங்கரவாதத்தில் தள்ளவும் சதி செய்ததாக அண்மையில் இந்திய அரசாங்கம் ஒரு அமைப்புக்கு தடை விதித்தது. இதுபோன்ற அமைப்புகளை ஒவ்வொரு நாடும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்

பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள்

பயங்கரவாதிகளுக்கு இடம் கொடுக்கும் சில நாடுகள், மீண்டும் மீண்டும் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. பயங்கரவாதத்திற்கு எந்த சர்வதேச எல்லையும் இல்லை என்று நான் நம்புகிறேன். எனவே அனைத்து நாடுகளும் அரசியலை ஒதுக்கிவைத்துவிட்டு பயங்கரவாதத்துக்கு எதிராக போரிடுவதில் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

தடய அறிவியல்

தடய அறிவியல்

பயங்கரவாதம் மற்றும் பொருளாதார குற்றங்களை தடுக்க தடய அறிவியல் துறை சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வழியில்தான் உலக அளவில் முதல் தடய அறிவியல் துறை பல்கலைக்கழகம் பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் இந்தியாவில் அமைக்கப்பட்டது.

ஹவாலா நிதி

ஹவாலா நிதி

அனைத்து வகையான பயங்கரவாத நிதி திரட்டலையும் தடுக்க பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் அனைத்து நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்பட்டு வருகிறது. சட்டவிரோத பண பரிமாற்றம், டிஜிட்டல் நிதி பரிவர்த்தனை தளங்களை தவறாக பயன்படுத்துவது, ஹவாலா போன்ற அனைத்து வகையான தவறான நிதி பரிவர்த்தனைகளையும் தடுக்க வேண்டும்.

சைபர் குற்றங்கள்

சைபர் குற்றங்கள்

பயங்கரவாதம், போதைப் பொருள் கடத்தல், பொருளாதார குற்றங்களை தடுக்க இந்திய அரசு தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் டேட்டாபேஸ்களை அமைக்க முடிவு செய்து இருக்கிறது. அதேபோல், மத்திய அரசு, இந்திய சைபர் குற்ற கூட்டுறவு அமைப்பையும் ஏற்படுத்த இருக்கிறது." என்றார்.

பி.எஃப்.ஐ தடை

பி.எஃப்.ஐ தடை

இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கடந்த அக்டோபர் மாதம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அதன் துணை அமைப்புகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+