Sunita Williams: பக்கத்துல இருக்கிற டவுனுக்கு போய்ட்டு வர்ற மாதிரி.. சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணங்கள்!
டெல்லி: விண்வெளியில் 9 மாதங்களாக சிக்கி இருந்த நாசாவின் விண்வெளி குழுவில் இடம் பெற்றிருந்த சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் மிகவும் பாதுகாப்பாக பூமிக்கு இன்று அதிகாலை திரும்பினர். விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்புவதற்கு தாமதமானதால் 190 பரிசோதனைகள் மற்றும் 900 மணிநேர ஆராய்ச்சி மேற்கொண்டவர்களாக சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்ஸ்மோர் புதிய சாதனையும் படைத்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், விண்வெளிப் பயணம் மேற்கொண்ட 2-வது இந்திய வம்சாவளி பெண். அவருக்கு முன்னர் கல்பனா சாவ்லா, விண்வெளிப் பயணம் மேற்கொண்டிருந்தார். 2003-ம் ஆண்டு விண்வெளியில் இருந்து திரும்பும் போது கல்பனா சாவ்லாவின் விண்கலம் வெடித்து சிதறியது. இதில் கல்பனா சாவ்லா உள்ளிட்ட 7 பேரும் உயிரிழந்தனர்.

கல்பனா சாவ்லாவுக்குப் பின்னர் இந்தியாவின் குஜராத் மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இணைந்து கொண்டார். சுனிதா வில்லியம்ஸ் மிக சிறந்த போர் விமானியுமாவார்.
சுனிதா வில்லியம்ஸின் விண்வெளி பயணங்கள்
- 2006-ம் ஆண்டு டிசம்பர் 5-ந் தேதி டிஸ்கவரி விணகலம் மூலம் முதன் முதலாக விண்வெளிக்குப் பயணித்தார் சுனிதா வில்லியம்ஸ். விண்வெளி ஆய்வுகளை நிறைவு செய்துவிட்டு 2007-ம் ஆண்டு ஜூன் 22-ல் பூமிக்கு திரும்பியது சுனிதா வில்லியம்ஸ் குழு.
- சுனிதா வில்லியம்ஸின் 2-வது விண்வெளிப் பயணம் 6 ஆண்டுகளுக்கு பின்னர் மேற்கொள்ளப்பட்டது. 2012-ம் ஆண்டு ஜூலை 15-ல் சுனிதா வில்லியம்ஸ், விண்வெளிக்கு பயணமானார். 2012-ம் ஆண்டு நவம்பர் 19-ல் பூமிக்கு திரும்பினார் சுனிதா வில்லியம்ஸ்.
- சுனிதா வில்லியம்ஸ் 2015-ல் வர்த்தக அடிப்படையிலான நாசாவின் விண்வெளி பயணங்களுக்கான வீரராக அறிவிக்கப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ். இதனடிப்படையில்தான் கடந்த ஆண்டு (2024) ஜூன் 5-ந் தேதி மீண்டும் விண்வெளிக்குப் புறப்பட்டார் சுனிதா வில்லியம்ஸ். இந்த பயணம் 8 நாட்கள் மட்டுமே திட்டமிட்ட நிலையில் தற்போது 9 மாதங்களுக்குப் பின்னர் இன்று சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்பி உள்ளார். சுனிதா வில்லியம்ஸை அழைத்துவர வேண்டிய விண்கலத்தின் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 9 மாதங்கள் தாமதமானது. விண்வெளியில் 900 மணிநேரங்கள், 190 பரிசோதனைகளை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்சர் மேற்கொண்டனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications