Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இதுதான் ரைட்டு.. சைபர் குற்ற நபர்கள் மீது குண்டர் சட்டம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் பாராட்டு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சைபர் குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் சட்டத்தை பயன்படுத்தி நடவடிக்கை மேற்கொள்ளும் தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டை சேர்ந்த அபிஜித் சிங் என்பவருக்கு எதிராக ஐ.டி சட்டத்தின் பிரிவு 420 மற்றும் பிரிவு 66டி ஆகியவற்றின் கீழ் சைபர் குற்றங்களுக்கு எதிராக குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதையடுத்து இந்த உத்தரவுக்கு எதிராகவும், குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும் சம்பந்தப்பட்ட நபர் உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்திருந்தார்.

Supreme Court Commends Tamil Nadu Government for Using Goondas Act Against Cyber Criminals

இந்த ரிட் மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஜாய்மால்யா பக்‌ஷி ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த விவகாரத்தில் எனது செயல்பாடுகள் என்பது ஒரு தனிநபருக்கு எதிரான ஒரு தனிப்பட்ட நிகழ்வு. பொது ஒழுங்கை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. இருப்பினும் சைபர் குற்றங்களுக்கான வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் சட்டப் பிரதிநிதித்துவத்திற்கு போதுமான அவகாசமும் வழங்கப்படவில்லை. குறிப்பாக 25 ஆம் தேதி விசாரணை என்று, 23 ஆம் தேதி தான் நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும் நான் மதுரையில் வசிக்கிறேன். ஆனால் விசாரணை சென்னையில் நடந்தது. இதனை உச்ச நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் என் மீது முன்னதாக குற்றப் பின்னணி எதுவும் கிடையாது. ஆனாலும் அதிகப்பட்சமாக 12 மாதங்கள் தடுப்பு காவல் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதனை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "இந்த விவகாரத்தில் குண்டர் போன்ற தடுப்பு காவல் சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுப்பது என்பது அது அரசின் விருப்புரிமை. தடுப்புக்காவல் காலத்தை ரிட் அதிகார வரம்பில் எங்களால் அதாவது உச்ச நீதிமன்றத்தால் தீர்மானிக்க முடியாது.

சைபர் குற்ற விவகாரத்தில் தடுப்புக் காவலுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்றால், அந்த உத்தரவு என்பது தானாகவே செயலிழந்து விடும். இருப்பினும் அதற்கான கால அளவைக் குறைக்க முடியாது. மேலும் வழக்கு குறித்த முழு தகவல்கள் குறித்த அறிக்கையை மனுதாரரும், அதேபோன்று எதிர்மனுதாரர் பதில் மனுவையும் தாக்கல் செய்யுங்கள்.

வழக்கை புதன்கிழமை பட்டியலிட்டு விசாரிக்கிறோம். இருப்பினும் சைபர் சட்ட குற்றவாளிகளுக்கு எதிராக குண்டர் போன்ற தடுப்புச் சட்டங்கள் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படுவது என்பது ஒரு நல்ல போக்கு. இது மிகவும் வரவேற்கத்தக்க அணுகுமுறை. குறிப்பாக இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கமான சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்வது பலனளிக்கவில்லை. இணையதள மோசடி வழக்குகளில் குண்டர் சட்டத்தை தமிழ்நாடு அரசு பயன்படுத்தி வருவது வரவேற்கத்தக்கது " என்று தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்து வழக்கை 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+