நில அபகரிப்பு வழக்கு.. முக அழகிரிக்கு ஷாக்! மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
டெல்லி: நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து முன்னாள் அமைச்சர் மு.க அழகிரி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சரியான கருத்தை தான் பிறப்பித்துள்ளது எனவும், எனவே வழக்கை அங்கே சந்திக்கலாம் என்றும் கூறியுள்ளது.
மதுரை சிவரக்கோட்டையில் 4 செண்ட் கோயில் இடத்தை அபகரித்ததாக மு.க அழகிரி உள்பட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்து இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தான் மு.க அழகிரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

கோயில் நிலத்தை அபகரித்ததாக
கடந்த 2014 ஆம் ஆண்டு மதுரை சிவக்கோட்டையில் மு.க அழகிரியில் நிறுவப்பட்ட பொறியியல் கல்லூரிக்காக 4 செண்ட் நிலம் அபகரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும், இந்த இடத்தை அபகரிப்பு செய்ததாகவும் மு.க அழகிரி மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. இதையடுத்து அதிமுக ஆட்சியின் போது மு.க அழகிரி உள்பட 7 பேர் மீது கோயில் இடத்தை அபகரித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு மு.க அழகிரியை போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி பத்திரங்களை பயன்படுத்துதல், ஏமாற்றுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. எனினும் குற்றச்சதி, குற்றவியல் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கை எதிர்கொள்ள வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
இதன் பின்னர் பகுதி குற்றச்சாடுகளில் இருந்து மு.க அழகிரி விடுவிக்கப்பட்ட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், அந்த மனுவை அனுமதித்ததோடு, மு.க அழகிரி அனைத்து குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.
வழக்கில் இருந்து முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் என்று கூறிய மு.க அழகிரியில் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்ற உத்தரவினை எதிர்த்து கடந்த ஆகஸ்டு 20 ஆம் தேதி மு.க அழகிரி உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஆர் மகாதேவன் ஆகியோர் விசாரித்தனர்.
வழக்கை எதிர்கொள்ள உத்தரவு
இன்று இந்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்த நிலையில் அதனை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். சென்னை உயர் நீதிமன்றம் கருத்து சரியாகவே உள்ளது. இதனால் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மு.க அழகிரி சென்னை உயர் நீதிமன்றம் கூறியது போல் வழக்குகளை எதிர்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டனர்.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications