டெல்லி மாணவர்களின் உரிமையை தமிழர்கள் பறிக்கிறார்கள்.. நான் கன்னடன்.. பிரகாஷ் ராஜ் சர்ச்சை!
டெல்லியில் மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் பறிக்கிறார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசி இருக்கிறார்.
Recommended Video
டெல்லி: டெல்லியில் மாணவர்களின் உரிமையை தமிழக மாணவர்கள் பறிக்கிறார்கள் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் பேசி இருக்கிறார்.
லோக்சபா தேர்தலில் கர்நாடகாவில் மத்திய பெங்களூர் தொகுதியில் பிரகாஷ் ராஜ் போட்டியிட்டுள்ளார். இவர் சுயேட்சையாக அங்கு தேர்தலில் நின்றார்.
இவருக்கு கர்நாடகாவில் ஆம் ஆத்மி ஆதரவு அளித்தது. இதையடுத்து டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிக்கு ஆதரவு அளித்து பிரகாஷ் ராஜ் நேற்று பிரச்சாரம் செய்தார்.

என்ன சொன்னார்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாக ஆடியோ ஒன்று சில நாட்களுக்கு முன் வெளியானது அதில், டெல்லியில் பிற மாநில மக்களின் ஆதிக்கம் அதிகம் ஆக்கிவிட்டது. டெல்லி பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் அதிகம் படிக்கிறார்கள். இதனால் அவர்களுக்கு வேலை கிடைக்கிறது. இதனால் டெல்லி வாசிகளின் வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

பிரகாஷ் ராஜ் கருத்து
இந்த நிலையில் டெல்லியில் நேற்று ஆம் ஆத்மி கட்சிக்காக பிரச்சாரம் செய்த பிரகாஷ் ராஜ், நான் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்தவன் கிடையாது. ஆனால் அவர்கள் டெல்லிக்கு நிறைய நன்மை செய்து இருக்கிறார்கள். டெல்லியின் கல்வி தரத்தை உயர்த்தி இருக்கிறார்கள். அதனால் அவர்களுக்காக பிரச்சாரம் செய்தேன்.

மாணவர்கள்
தமிழக மாணவர்கள் டெல்லி பல்கலையில் சேர்வதால் டெல்லி மாணவர்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இது உண்மை. கெஜ்ரிவால் இப்படி சொல்வதில் தவறு எதுவும் கிடையாது. டெல்லி மாணவர்களின் உரிமை தமிழக மாணவர்களால் தட்டிப்பறிக்கப்படுகிறது.

கன்னடன்
டெல்லிக்கு தனி மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும். அப்போதுதான் இந்த பிரச்சனை தீரும். நான் தமிழனாக இருந்து கொண்டு இப்படி பேசலாமா என்கிறார்கள். நான் தமிழன் அல்ல. நான் கன்னடன். தமிழ் படங்களில் நடித்து இருக்கிறேன், என்றுள்ளார். இவரின் இந்த கருத்துக்கு டெல்லி தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications