'ஜாதிவாரி கணக்கெடுப்பு' பாம்பு புற்றுக்குள் கையை விட்ட தெலுங்கானா காங்கிரஸ் அரசு விழி பிதுங்குகிறது!
டெல்லி: கர்நாடகா மாநிலத்தைத் தொடர்ந்து தெலுங்கானா மாநில அரசும் காங்கிரஸ் அரசு ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் சிக்கி இருக்கிறது. தெலுங்கானா உள்ளாட்சித் தேர்தலில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையில் இடஒதுக்கீட்டை செயல்படுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும் என பிற்படுத்தப்பட்டோர் ஜாதிய அமைப்புகள் எச்சரித்துள்ளன.
நாடு முழுவதும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த கோரிக்கையை இடைவிடாமல் பேசி வருகிறார்.

காங்கிரஸ் ஆளும் கர்நாடகா மாநிலத்தில் முதல்வர் சித்தராமையா, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட துணை முதல்வர் டிகே சிவகுமார் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள், காங்கிரஸ் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் முதல்வர் சித்தராமையாவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதே நிலைமையைத்தான் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் எதிர்கொண்டிருக்கிறார். தெலுங்கானா மாநில அரசும் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியது. இந்த கணக்கெடுப்பில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் அல்லாமல் 46..25% என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 10.08%. தெலுங்கானாவில் தலித்துகள் 17.43%; பழங்குடிகள் 10.45% இருப்பதாகவும் அம்மாநில அரசின் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இப்போது இந்த ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களே முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. தெலுங்கானாவில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த உள்ளாட்சித் தேர்தலில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 56.3% இடஒதுக்கீட்டை முதல்வர் ரேவந்த் ரெட்டி அமல்படுத்த வேண்டும் என்று பிரதான எதிர்க்கட்சியான பிஆர்எஸ் வலியுறுத்தி உள்ளது. அத்துடன் இதர பிற்படுத்தப்பட்டோர் ஜாதி அமைப்புகளும் இந்த கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே உள்ளாட்சித் தேர்தலில் தங்களுக்கான இடஒதுக்கீடு பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும்; இல்லை எனில் மாநில அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்துள்ளன.
இதனால்தான் பாம்பு புற்றுக்குள் கையை விட்டுவிட்ட கதையாக ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் வெளியே வரவே முடியாமல் சிக்கிக் கொண்டிருக்கிறது காங்கிரஸ் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்?












Click it and Unblock the Notifications