100- 120 பேர் கொண்ட லிஸ்ட் ரெடி! பிப்.,26ல் வெளியாகும் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்..
டெல்லி: எதிர் வரும் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக விரைவில் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த லோக்சபா தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமானதாகும். இந்த முறையும் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி களம் இறங்கும் நிலையில், அவர் வெற்றி பெற்றால் தொடர்ந்து மூன்று முறை பிரதமராகும் தலைவர் எனும் சாதனைக்கு அவர் சொந்தக்காரராவார். அதேபோல, 2025ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இதற்காக மத்தியில் பாஜக ஆட்சி அதிகாரத்தில் இருப்பது அவசியம்.

எனவே அதற்கான வேலைகளில் கட்சி தீவிரமாக இறங்கியுள்ளது. முதற்கட்டமாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகார் என இரண்டு மாநிலங்களில் உள்ள 120 தொகுதிகளை அப்படியே அள்ள திட்டமிட்டிருக்கிறது. இதற்காக பாரத ரத்னா விருதை மத்திய அரசு பயன்படுத்தியுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. பீகார் மாநிலத்தை பொறுத்த அளவில், முன்னாள் முதல்வரும் முதல் முறையாக இட ஒதுக்கீட்டுக் கொள்கைக்கு வடிவம் தந்தவருமான கா்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னாவை மத்திய அரசு சமீபத்தில் வழங்கியது.
இதன் மூலம் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், சௌத்ரி சரண் சிங்கிற்கு அறிவித்ததன் மூலம் அவரது பேரன் ஜெயந்த் சௌத்ரியின் தலைமையில் இயங்கும் ராஷ்ட்ரீய லோக தளமும் தேசிய ஜனநாய கூட்டணியின் ஓர் அங்கமாக மாற்றி, வாங்கு வங்கி சதவிகிதத்தை பாஜக உயர்த்தி இருக்கிறது. இது தவிர ராமர் கோயில் திறப்பும் பாஜவின் அரசியல் மைலேஜை அதிகரித்திருக்கிறது. வட மாநிலங்களில் இப்படியாக தேர்தலுக்கு ரெடி ஆனாலும், தென் மாநிலங்களில் பாஜக கொஞ்சம் தடுமாறியே வருகிறது.
குறிப்பாக தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநில அரசுகள் சமீபத்தில் நடத்திய போராட்டங்கள் பாஜகவை சற்று பலவீனமாக்கியுள்ளது. நிதி பகிர்வில் தென் மாநிலங்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என்பதுதான் இந்த போராட்டத்திற்கான காரணம். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக எம்பிக்கள், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இப்படியாக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில், பாஜக தனது கூட்டணி கட்சிகளுடன் இன்னும் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை என்று விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. ஆனால், விரைவில் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. வரும் 26ம் தேதி இந்த பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதில் 100-120 வேட்பாளர்களின் பெயர்கள் இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
-
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
“காருக்குள் வைத்து தவறாக நடக்க முயற்சி”.. பாஜக முக்கிய நிர்வாகி மீது மகளிரணி தலைவி பரபரப்பு புகார் -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி..40 கேட்ட பாஜகவுக்கு 27! ஒரே நாளில் முடிந்த டீலிங்..கெத்து அதிமுக!












Click it and Unblock the Notifications